tamilnadu

img

நெய்மர் பாலியல் வழக்கு ஆதாரம் இல்லை என கைவிரிப்பு

கால்பந்து உலகின் முன்னணி நட்சத்திரமும், பிரேசில் கால்பந்து அணியின் கேப்டனுமான நெய்மர் தற்போது பிரான்ஸ் நாட்டின் கால்பந்து கிளப் அணியான பாரீஸ் செயின்ட் ஜெர்மன் (பிஎஸ்ஜி) அணிக்காக விளையாடி வருகிறார்.  கடந்த மாதம் நெய்மரின் இன்ஸ்டா கிராம் வலைத்தளத்தில் தோழியாக உள்ள இளம்பெண் ஒருவர், “பாரீஸ் நகர உணவு விடுதி ஒன்றில் நெய்மர் என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்” என பிரேசிலைச் சேர்ந்த இளம்பெண் சாவ்பாவ்லோ (பிரேசில்) நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த பாலியல் புகாருக்கு நெய்மர் மறுப்பு தெரிவித்த நிலையில், சாவ்பாவ்லோ  காவல்துறை துரித விசாரணையில் கள மிறங்கியது. விசாரணை முடிவில், “நெய்மருக்கு எதிரான குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரம் இல்லை” எனக் கூறி நீதித்துறைக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.    அறிக்கைக்கு இன்னும் அட்டர்னி ஜெனரல் பதிலளிக்கவில்லை. அறிக்கையில் சந்தேகம் இருந்தால் நீதித்துறை விசாரணையில் குதிக்கும் என்பதால் வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதாகவே கருத முடியும். நீதித்துறையின் முடிவுப் படியே நெய்மரின் பாலியல் வழக்கு அடுத்த கட்டத்திற்கு நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் வீடியோ ஆதாரம் உள்ளது. புகார் அளித்த அந்த பெண் பாரீஸ் விடுதியில் நெய்மரை அடித்துத் துவைத்து எடுப்பார். வெளிப்படையான ஆதாரம் இருந்தும் சாவ்பாவ்லோ காவல்துறையின் அறிக்கை ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.