tamilnadu

img

பிரேசில் கால்பந்து வீரர் ஜீசஸுக்கு 2 மாத தடை

பிரேசில் கால்பந்து அணியின் முன்கள வீரரும், மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து கிளப்) அணியின் நட்சத்திர வீரருமான கேப்ரியல் ஜீசஸ் (22) சமீபத்தில் நிறைவு பெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் முரட்டுத்தனமாக விளையாடியதாகக் கூறி நடுவரிடம் சிவப்பு அட்டையைப் பரிசாகப் பெற்றார்.   சிவப்பு அட்டை பெற்றதால் கடும் கோபத்துடன் வெளியேறிய ஜீசஸ்  அதிகாரி கள் உட்கார அமைக்கப்பட்டு இருந்த தற்கா லிக ‘டக்-அவுட்’ மற்றும் உதவி நடுவருக்காக வைக்கப்பட்டு இருக்கும்  வீடியோ மானிட்டரை (வார்) எட்டி உதைத்தார். ஆட்டம் நிறைவடைந்த பிறகு ஜீசஸ் தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார்.     மன்னிப்பு கோரினாலும் ஒழுங்கு நட வடிக்கையில் களமிறங்கிய கோபா அமெரிக்க நிறுவனம் ஜீசஸுக்கு ரூ.21 லட்சம் அபராதம் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாட 2 மாத தடை விதித்துள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து கண்டுகொள்ளாமல் இருந்த பிரேசில்  கால்பந்து கூட்டமைப்புக்கு ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.  நடப்பு சீசன் கோபா அமெரிக்கக் கோப்பையைப் பிரேசில் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.