tamilnadu

img

செம்மண் அள்ளுவதை கவனிக்குமா கனிமவளத்துறை?

வேடசந்தூர், ஜூன் 30-   திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஸ்ரீராமபுரம் ஊராட்சி பூத்தாம் பட்டியில் 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட சிதம்பரம்பிள்ளை குளம் உள்ளது. இப்பகுதி யில் மழை பெய்தால் குளத்தில் மழை தண்ணீர் வந்து நிற்கும். இதனால் குளத்தைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். சிலர் விவசாய நிலத்திற்கு வண்டல்மண் எடுப்பதாக அனுமதி பெற்று செம்மண்ணை குறிப்பிட்ட அளவிற்கு மேல் பொக்லைன் இயந்திரம் கொண்டு தோண்டி எடுத்து டிப்பர் லாரிகள் மூலம் கொண்டு சென்று தனியார் செங்கல் சூளைக்கு விற்பனை செய்கிறார்கள். குறிப்பிட்ட அளவிற்கு மேல் செம் மண்ணை தோண்டி எடுப்பதால்  மழை தண்ணீர் குளத்திற்கு வந்தாலும் நிலத்தடிநீர் மட்டம் உயராது என்பதால்  விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.  குளத்தில் செம்மண் திருடி தனியார் செங் கல் சூளைக்கு கொண்டு செல்வது குறித்து வேடசந்தூர் வருவாய்த்துறையினருக்கு விவசாயிகள் புகார் தெரிவித்தும்  நடவடிக்கை யும் இல்லை. இது குறித்து வேடசந்தூர் வட்டாட்சியர் லதாவிடம் கேட்டதற்கு குளத்தில் செம்மண் எடுப்பதற்கு கனிமவளத்துறையினர் அனு மதி கொடுத்திருப்பார்கள். அதற்கும் எங்க ளுக்கும் சம்பந்தம் இல்லை என்றார்.