பென்னாகரம், ஆக.17- 73ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரம் நடு விழா நடைபெற்றது தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அரசு ஆண் கள் மேல்நிலைப்பள்ளியின் 73ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) தமிழ் வேல் தேசிய கொடியினை ஏற்றி வைத் தார். இவ்விழாவில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து பென்னாகரம் பேரூ ராட்சியின் சார்பில், பள்ளி வளாகத்தில் சுமார் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. மரம் நடும் விழாவில், பென்னாகரம் பேரூராட்சியின் உதவி செயல் அலுவலர் பெருமாள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.