தருமபுரி, மார்ச் 1- தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்கத்தின் தருமபுரி மாவட்ட முதல் மாநாடு மற்றும் சிறந்த கலை ஞர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா தருமபுரி வள்ளலார் திடலில் ஞாயிறன்று நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு கலைஞர்கள் டி.ஆர்.சின்னசாமி, ஜி.சின்னசாமி, நடிகர் ஆர்.சிங்காரவேலன் ஆகியோர் தலைமை வகித் தனர். தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் செயலாளர் நடிகர் ராதாரவி, சென்னை லயோலா கல்லூரி மாற்று ஊடக மைய இயக்குனர் பேராசிரியர் ஆர்.காளீஸ்வரன், கலை பண்பாட்டுத்துறை மண்டல இயக் குநர் ஹேமநாதன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநிலகுழு உறுப்பினர்.நாகைபாலு, தமிழ்நாடு கலை இலக்கிய மன்ற பொறுப்பாளர் ரவீந்திர பாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் எஸ்.தேவராசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். இவ்விழாவில் தியாகி சுப்பிரமணிய சிவாநாடகக்குழு, ஸ்ரீதோபல்சாமி தெருக் கூத்துநாடக்குழு, தப்பாட்டக்குழு கோல் விளையாட்டு, ராகவா லாரன்ஸ் அறக் கட்டளையின் மாற்றுத்திறனாளிகளின் நடனம், கிராமிய பாடல், பம்பை கலை ஞர்கள் நிகழ்ச்சி மற்றும் தவில், நாதஸ்வரம், நையாண்டி, கரகாட்டம் உள்ளிட்ட நூற் றுக்கும் மேற்பட்ட கலைக்குழுவினரின் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக, தெருக்கூத்து உள்ளிட்ட பாரம்பரிய கலைகளின் வேடமணிந்த கலைஞர்களின் ஊர்வலம் தருமபுரி ஆவின் பாலக வாளகத்திலிருந்து துவங்கி வள்ள லார் திடலை வந்தடைந்தது. மத்திய, மாநில அரசுகள் நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை சரியாக சேர வேண்டும். கலை நிகழ்ச்சிக்கு செல்லும் கலைஞர்களின் வாக னங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதைக் கைவிடவேண்டும். கலை ஞர்களுக்கு ஓய்வூதியத்திற்கான வயது வரம்பை ஆண்களுக்கு 50 வயதாகவும், பெண்களுக்கு 45 வயதாகவும் குறைத்து, ஓய்வூதிய தொகையை ரூ.5 ஆயிரமாக வழங்கவேண்டும். மாவட்ட ஆட்சியர் தலை மையில் இயங்குகின்ற தருமபுரி கலை மன்றத்தில் நாட்டுபுறக்கலைஞர்களை உறுப்பினராக சேர்க்க வேண்டும். தமிழக கத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் கலைஞர்களுக்கு கலைநிகழ்ச்சி நடத்த வாய்ப்பு அளிக்கவேண்டும். நாட்டுப்புறக் கலைக்குழுவிற்கு ஆடை மற்றும் அணி கலன், இசைக்கருவிகள் வாங்குவதற்கு ரூ.1 லட்சமாக உயர்த்த வேண்டும். நாட்டுப்புற கலைஞர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். நாட்டுபுறக் கலைஞர்கள் இறப்பிற்கு வழங்கும் இழப்பீட்டு தொகையை ரூ.3 லட்சமாக உயர்த்த அரசு ஆணை வெளிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.