tamilnadu

img

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வரின் ஊழியர் விரோதப்போக்கு

தருமபுரி, ஜூன் 13- கரூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வரின் ஊழியர் விரோதப் போக்கை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டு வந்தனர். இவர்களுக்கு ஆதரவாக கலந்துகொண்ட தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தின்  மாநில துணைத் தலைவரும், தமிழ்நாடு அரசு அனைத்து மருந் தாளுநர் சங்க மாநில தலைவரு மான மு.சுப்பிரமணியனை தற் காலிக பணிநீக்கம் செய்ய கரூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் உத்தரவிட்டுள்ளர். இதுதொழிற் சங்க ஜனநாயக குரல்வளையை நெறிக்கச்செய்யும் நடவடிக்கை யாகும். இத்தகைய அராஜக, அடக்குமுறை நடவடிக்கை களை கண்டித்தும், தற்காலிக பணிநீக்க ஆணையை ரத்து செய்ய வேண்டும் என வலி யுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதன்ஒருபகுதியாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் எம்.சிவப்பி ரகாசம் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் பி. எஸ்.இளவேணில், கூட்டுற வுத்துறை சங்க மாவட்ட செய லாளர் ஜி.பழனியம்மாள், பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் நாகராஜன், தலைமை ஆசிரியர் கழக தலை வர் தன்ராஜ், அங்கன்வாடி ஊழி யர் சங்க மாவட்ட தலைவர் தெய்வாணை, தமிழ்நாடு அரசு செவிலியர் சங்க மாவட்ட செய லாளர் ரவிச்சந்திரன், பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சேலம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் முருகப்பெரு மாள் தலைமை வகித்தார். இதில், சங்க மாவட்ட துணை தலைவர் கள் வி.செல்வம், சி.கே.ராமச்சந்தி ரன், இணை செயலாளர் பி. சுரேஷ், செவிலியர் சங்க மாநில துணை தலைவர் மனோன்மணி உள்ளிட்டு பலர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுப் பிரமணியத்தின் மீது கரூர் மருத் துவ கல்லூரி முதல்வரால் எடுக்கப் பட்ட தற்காலிக பணிநீக்க நட வடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும். அடக்கு முறையை கையாளும் தமிழக அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.