தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட் டியில் 34.5 ஏக்கர் பரப்பளவில் சின்ன ஏரி உள்ளது. இதன் நடுவில் வண் ணான் குட்டை என்ற படித்துறை இருந்தது. தற்பொழுது ‘வண்ணான் குட்டை புனரமைப்புத் திட்டம்’ என்ற பெயரில் ரூ.15 லட்சம் மதிப்பில் பாப் பாரப்பட்டி பேரூராட்சியில் டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள் ளது. ஆனால், இதில் அதிர்ச்சியளிக் கக்கூடிய விசயம் என்னவென்றால், ஒப்பந்தம் போடப்பட்ட வண்ணான் குட் டையை புனரமைக்கும் பணிக்கு பதி லாக அங்கிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் வேறு ஒரு இடத்தில் குட்டை அமைக்க அளவீடு செய்யப் பட்டு அதற்கான பணி உத்தரவு வழங்கி, அங்கு குட்டை அமைக்கும் பணிகள் வெகு ஜோராக நடைபெற்று வருகிறது என்பதே அதுவாகும். இவ்வாறு ஏரி புனரமைப்பு டெண் டரில் முறைகேடு அரங்கேறி வரும் நிலையில், ஏற்கனவே உள்ள குட் டையை புனரமைப்பதற்கு பதிலாக புதிய இடத்தில் குட்டை வெட்டுவதன் மூலம் அந்த இடத்தில் உள்ள களி மண், வண்டல் மண் மற்றும் கிராவல் மண்ணை அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக 40 அடி ஆழம் வரை விதிமுறைகளை மீறி வெட்டி எடுக்கப் படுகிறது.
இதன்பின் செங்கல் சூளை, ரியல் எஸ்டேட் மற்றும் தனியார் சாலை அமைக்கும் பணிகளுக்கும் தனி யார் நிலத்தை மேம்படுத்தும் பணி களுக்காகவும் கடத்தி விற்பனை செய்யப்பட்டு இரட்டை லாபம் பார்க்கப்பட்டு வரு வதாக அப்பகுதி விவசாயிகள் மற் றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின் றனர். இவ்வாறு கடந்த மார்ச் மாதம் தொடங்கி இது வரை சுமார் இரண் டாயிரம் லோடு மண் வெட்டி யெடுத்து இரவு நேரங்களில் கடத்தப்படுகிறது. இதுகுறித்து பேரூ ராட்சி நிர்வாகம் மற்றும் பொறியாளர் களிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏனெனில், ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் பினாமி பெயரில் குத்தகை எடுத்து இந்த பணியை மேற்கொள்வதால் புகார் கூறும் விவசாயிகள் மிரட்டப்படு வதாக வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வட்டார செயலாளர் சின்னசாமி கூறுகையில்: பாப்பாரப்பட்டி சின்ன ஏரியில் நடைபெறும் குட்டை புனரமைப்புப் பணி தொடர்பான திட்ட மதிப்பீடு குறித்து அறிவிப்புப் பலகை எதுவும் பணி நடைபெறும் இடத்தில் வைக்கப்படவில்லை.
100 மீ நீளம், 50மீ அகலம், 1.5 மீ ஆழம் என்ற அளவில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணி டெண்டர் விடப்பட்டது. ஆனால் விதி முறைகளை மீறி நாற்பது அடி ஆழத்திற்குக் குழி தோண்டி வண்டல் மண், களிமண் ஆகியவற்றை வெட்டி எடுத்து அப்பகுதி யில் உள்ள செங்கல் சூளை களுக்கும், கிராவல் மண்ணை ரியல் எஸ்டேட் மற்றும் நிலத்தை மேம்படுத்தும் பணிக ளுக்கும் என ஆயிரக்கணக்கான லோடு மண்ணை டிப்பர் லாரிகள் மூலம் கடத்தப் பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகி றது. இதன் மூலம் கடத்தல் பேர்வழிகள் பல லட்சக்கணக்கான ரூபாய் லாபம் பார்த்து வருகின்றனர். இதனைக் பேரூராட்சிகள் துறை அதிகாரிகள் கண்டும், காணாமல் மட்டுமல்ல, அவர்களுக்கு உடந்தையாகவும் செயல்பட்டு வருகின்றனர். மேலும், இப்பகுதியில் உள்ள மரங்களை விதிமுறைகளை மீறி வெட்டியும், வேரோடு பிடுங்கியும் செங்கல் சூளைகளுக்கு விற்றுள்ளனர். இந்த கொள்ளை குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரித்து, விதிமீறலுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் கடத்தல் பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுத்து சின்ன ஏரியைப் பாதுகாக்க வேண்டும். இதன்பின்னரும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும், என்று தெரிவித்தார். -ஆ .ஜீவானந்தம்