tamilnadu

img

கட்டணமில்லா சேவை

சென்னை, ஏப்.30- கொரோனா வைரஸினால் தற்சமயம் நிலவிவரும்  அசாதாரண சூழ்நிலையில் விளை பொருட்களை விற்பனை செய்ய  விவசாயி கள் தாங்களாகவே வியா பாரிகளை தொடர்பு கொண்டு வேளாண் விளை பொருட்களை விற்பனை செய்ய ஒரு “கட்டணமில்லா உழவன் இ சந்தை” எனும் சேவையை “உழவன் செயலி” மூலம் உருவாக்கியுள்ளது.

இந்த சேவையின் மூலம் விவசாயிகள் தாங்கள்  விளைவித்த விளை பொருட்களையும், வியாபாரிகள்  தாங்கள் வாங்க விரும்பும் விளை பொருட்களையும் பதிவு செய்து கொள்ளலாம். வியாபாரிகள் மாவட்டம்  வாரியாக மற்றும் பயிர் வாரியாக விவசாயி கள் விற்  பனை செய்யவுள்ள விளைபொருட்களை இச்செய லின் மூலம் பார்த்து விருப்பம் தெரிவிக்கலாம்.

உடனடியாக வியாபாரிக ளின் தொலைபேசி எண்  உள்ளிட்ட விவரம் விவசாயி களுக்கு உழவன் செயலி யின் வாயிலாக தெரிவிக்கப்படும். இதன் மூலம் விவ சாயிகள் பல்வேறு வியாபாரிகளை தொடர்பு கொள்ள  வாய்ப்பு ஏற்பட்டு லாபகரமான விலையில் விற்பனை  செய்து பயனடையலாம்.

எனவே உழவர் பெருமக்கள் அனைவரும் உழவன்  செயலியில் உள்ள உழவர் இ சந்தை சேவையை பயன்  படுத்தி தங்கள் விளை பொருளுக்கேற்ற விலையை  பெற வேளாண்மை துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.