மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஜெயராஜ் போக்சோவில் கைது செய்யபட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம், வடலூர் அருகே உள்ள மருவாய் கிராமத்தில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஜெயராஜ், மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதாக மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று ஜெயராஜ் மீதி உரிய நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் அப்பள்ளியை முற்றுகையிட்டுள்ளதாகவும், வடலூர் போலிசார் சம்பவ இடத்திற்கு வந்து பெற்றோர்களை சமாதம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஆசிரியர் ஜெயராஜ் குறிஞ்சிப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவல் அறிந்த குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர், இது தொடர்பாக மாணவிகளிடம் விசாரணை செய்து நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் செய்தது.
அதனை தொடர்ந்து ஜெயராஜை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.