12-வது சீசன் உலகக்கோப்பை தொடர் வரும் 30-ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் 10 நாடுகள் தற்போது பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளதமிழக வீரர் விஜய் சங்கர் கென்னிங்டன்ஓவல் மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட பொழுது வலது கையில் காயம் ஏற்பட்டது. இதனால் பயிற்சியிலிருந்து பாதியில் விலகினார்.தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும் காயத்தின் தன்மை பற்றிய விவரம் தெரியவில்லை.சனிக்கிழமையன்று நியூஸிலாந்து அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் விஜய் சங்கர்களமிறங்கவில்லை.பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்று பிரிவுகளிலும் சூப்பர் பார்மில் உள்ள விஜய் சங்கர் காயமடைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.