உலக கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் வீரர் சோயாப் மாலிக் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் வங்கதேசத்தை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் அரையிறுதி செல்லும் வாய்ப்பை பாகிஸ்தான் இழந்துவிட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் சோயாப் மாலிக் (37 வயது), சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இதை அடுத்து, சக வீரர்கள் அவரை தோளில் சுமந்தபடி சென்றனர். சோயாப் மாலிக் இதுவரை 287 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 7ஆயிரத்து 534 ரன்கள் குவித்துள்ளார். அதேபோன்று ஒரு நாள் போட்டிகளில் 158 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.