tamilnadu

img

இன்னும் 12 நாட்கள் உலகக் கோப்பை திருவிழா இங்கிலாந்து 2019

ஆசிய கண்டத்தின் பலமான கிரிக்கெட் அணியும், இரண்டு முறை உலகக்கோப்பையை வென்றஅணியுமான இந்திய அணியைப் பற்றி இன்று பார்க்கலாம்....

கேப்டன்: விராட் கோலி. 

பேட்ஸ்மேன்கள் : ரோஹித் சர்மா, சிக்கர் தவான், விராட் கோலி. 

ஆல்ரவுண்டர் : ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா.  

விக்கெட் கீப்பர்கள் ; மகேந்திர சிங் தோனி,தினேஷ் கார்த்திக், கே.எல். ராகுல்.  

பந்துவீச்சு : முகமது ஷமி, ஜாஸ்பிரித் பும்ரா,யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார்.  

சிறப்பு : இந்திய அணி டெத் ஓவர்கள் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை எளிதாக கட்டுப் படுத்தி விரைவாக சேசிங் செய்து ஆட்டத்தை முடிக்கும் திறமை உடையது. விக்கெட் விழவில்லையென்றாலும் பரவில்லை சிக்ஸர், பவுண்டரி மூலம் எதிரணி ரன் குவிக்கக் கூடாது என்ற எண்ணத்துடன் 11 வீரர்களும் களத்தில் பம்பரமாகச் சுழலுவார்கள்.எதிரணி பேட்ஸ்மேன் உலகத்தரம் வாய்ந்தவராக இருந்தாலும் சரி சுழற்பந்து வீச்சு மூலம் பந்தின் பிட்ச் வகைகளை மாற்றி மாற்றித் திணறடிப்பார்கள். 

வீரர்கள் தேர்வு எப்படி?

உலகக்கோப்பை தொடருக்கு அறிவிக்கப் பட்டுள்ள இந்திய அணி 4 பிரிவுகளிலும் பலமான வகையில் உள்ளது.ஆல்ரவுண்டர்,பந்துவீச்சு பிரிவுகள் அசுர பலத்தில் உள்ளதால் எதிரணிபேட்ஸ்மேன்களுக்கு முதல் 30 ஓவர்களில் பலத்த சேதாரம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இங்கிலாந்து மண்ணில் 

பலம்: வேகப்பந்துவீச்சு சாதகமான இங்கிலாந்து ஆடுகளத்தில் பலமான வேகப்பந்து யூனிட்டுடன் களமிறங்குவது இந்திய அணிக்கு சாதகமான சூழலை உருவாக்கும்.இந்திய வம்சாவளியினர் இங்கிலாந்து நாட்டில் அதிகளவு வசிப்பதால் தனது சொந்த நாட்டில் விளையாடுவது போன்ற உணர்வுடன் வெற்றியைக் குவிக்க அதிகவாய்ப்பு உள்ளது.மிடில் ஆர்டர் மற்றும் பின் வரிசை என மொத்தம் 7 பேர் பேட்ஸ்மேன்களாக இருப்பதால் ரன் வேட்டையில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும்.வேகத்திற்கு ஷமியும், டெத் ஓவருக்கு பும்ராவும், தரைதட்டும் ஸ்விங்கிற்கு புவனேஸ்வரும் என வேகப்பந்து யூனிட் வித்தியாசமாக இருப்பதால் தொடக்க ஓவர்களில் எதிரணிக்கு கடும்சிக்கல் ஏற்படும்.யுஸ்வேந்திர சஹால், குல்தீப்யாதவ், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர்,கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பகுதிநேரத்தில் கலக்க தயாராக இருக்கின்றனர்.தோனியின் அனுபவமும் கைகொடுக்கும் என்பதால் இந்திய அணி சிரமின்றி வெற்றியை குவிக்கும். 

பலவீனம்: ஸ்விங் பந்துகளை இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக அடித்து ஆடினாலும், பவுன்சர் பந்துகளில் கடுமையாகத் திணறுவது.இந்திய அணியின் முக்கிய பலவீனம் ஆடும் லெவனை தேர்வு செய்வது தான்.களத்திற்கு ஏற்பபந்துவீச்சாளரைக் களமிறக்காமல் சொதப்பி வெற்றியைக் கோட்டைவிடுவது. மிடில் ஆர்டர் வீரர்கள் தடுமாறினால், பின் வரிசையிலும் தடுமாற்றம் ஏற்படுவது. சிக்கர் தவானின் ஒரே மாதிரியான ஆட்டமுறை மிடில் ஆர்டருக்கு பாதிப்பு ஏற்படுத்துவது. விராட் கோலி கேப்டன் என்றபொறுப்புணர்வு இல்லாமல் களத்தில் உள்ள வீரர்களிடம் கடிந்து கொள்வது.இது வீரர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவது.  

மாற்ற வேண்டியவை: வீரர்கள் தேர்வில் கவனமாக செயல்பட வேண்டும்.பின்வரிசை பேட்ஸ் மேன்களுக்கு மனதைரியத்துடன் பேட்டிங் பயிற்சிவேண்டும்.4-வது வரிசை பேட்ஸ்மேன் தேர்வு விவகாரத்தில் சீரிய முறையில் கவனம் வேண்டும்.பவுன்சர் பந்துகளை எதிர்கொள்ளக் கூடுதல் பயிற்சி அவசியம்.30-45 ஓவர்களில் கூடுதல் ரன்களை வாரி வழங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

உலகக்கோப்பையில் எப்படி? 

மூன்று பிரிவுகளிலும் பலமாகக் களமிறங்குவதால் இந்திய அணி அரையிறுதி வரை சிக்கல்இல்லாமல் பயணிக்கும்.ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகியஅணிகள் இந்தியா மீது தனி கவனம் செலுத்துவதால் கோப்பை கைப்பற்றுவது குறித்து கருத்து தெரிவிப்பது சிரமம் தான்.


நாளை நியூஸிலாந்து...