tamilnadu

img

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தருமபுரி, ஜூன் 21- ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால், அருவிகளில் குளிக்க 2 ஆவது  நாளாக தடை தொடர்கிறது. கா்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை முன்ன தாகவே தொடங்கியுள்ளது. இதனால் கபினி அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அந்த அணையின் நீர்மட்டம் 80.51 கனஅடியாக அதி கரித்துள்ளது. இந்நிலையில், கபினி அணையின் பாது காப்புக்கருதி புதனன்று விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம்  தண்ணீர் திறக்கப்பட்டது. இருப்பினும் அணைக்கு வரும்  உபரிநீரின் அளவு தொடர்ந்து அதிகரித்ததால், நீர்திறப்பு  25 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த நீர்  வியாழனன்று இரவு தமிழக - கர்நாடகா எல்லையான பிலி குண்டுலுவை வந்தடைந்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதன்படி, வெள்ளியன்று இரவு 9 மணி நிலவரப்படி விநாடிக்கு 17 ஆயி ரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, சனியன்று காலை நில வரப்படி 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர் வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண் ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. இதனால் இரண்டா வது நாளாக சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சியில், ரூ.102.50 லட்சம் மதிப்பீட்டில் யோகா மையம் கட்டும் பணி,  மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்கு சனியன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் கே.இ.பிரகாஷ் எம்.பி., திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் கே.எஸ்.மூர்த்தி, நகர்மன்றத் தலைவர் மோ.செல்வராஜ், துணைத்தலைவர் ப.பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.