அதிகாரிகளின் அலட்சியம் - அவதிப்படும் மாற்றுத்திறனாளிகள்
கோவை, ஜூன் 21 – கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், இலவச பேருந்து பயணச் சலுகை (பஸ்பாஸ்) கேட்டு விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகள், அதிகாரிகளின் அலட்சியத்தால் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, அர சாணை நிலை எண். 01-இன்படி, 100% இலவச பயணச் சலுகையை (பஸ்பாஸ்) வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சாதாரணக் கட்டணம் கொண்ட பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலு வலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தில் விண்ணப் பிக்க, மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் உரிய சான்றுகள் வைத்திருக்க வேண்டும். இதுகுறித்து விண்ணப்பதாரர்கள் கூறுகையில், “கடந்த மார்ச் மாதத்தில் இத்திட்டத்தில் விண்ணப்பித்தோம். ஒவ் வொரு வாரமும் வந்து கேட்கிறோம். ஆனால், அதிகாரி கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாகச் செயல்படுகிறார்கள்,” என்று வேதனை தெரிவித்தனர். தமிழக முதல்வரின் நேரடியான பார்வையில் உள்ள இத் துறையில், அதிகாரிகளின் அலட்சியம் செய்வதை ஏற்க முடி யாது. மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை விரை வாகவும் எளிதாகவும் முடித்துத்தர மாவட்ட ஆட்சியர் உரிய தலையீட்டை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள னர்.
ஆழ்துளை கிணறு தோண்டியதில் ஊழலா ? பொய்யின் மறு பெயர் பாஜக என நெட்டிசன்கள் வறுத்தெடுப்பு
கோவை, ஜூன் 21 - ஆழ்துளை கிணறு தோண்டியதில் ஊழல் நடந்ததாக கோவை உள்ளூர் பாஜகவினர் உள்நோக்கத்தோடு வீடியோ வெளியிட்ட நிலையில், அதன் உண்மைத்தண்மை குறித்து கொஞ் சமும் ஆராயாமல் பாஜக மாநிலத்தலை வர் அதனை தனது சமூக வலைத்தளத் தில் பகிர்ந்துள்ளார். ஆனால், இது முழுக்க திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பொய்யின் மறு பெயர் பாஜக என சமூக வலைத்தளங்களின் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வரு கின்றனர். கோவை மாவட்டம், செட்டிபாளை யம் பேரூராட்சியில் 7 அடி ஆழத்தில் குழாய் பதித்து ஆழ்துளை கிணறு அமைத்து ஊழல் நடந்ததாக பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் X தளத்தில் பதிவு செய்து, திமுக அரசை களங்கப்படுத்த முயன்றார். பாஜக வார்டு கவுன்சிலர் ஒருவர் பரப் பிய வீடியோவை ஆதாரமாகக் கொண்டு, திமுகவை இழிவுபடுத்திய இந்த அவதூறு, பாஜகவின் அரசியல் அயோக்கியத்தனத்தை வெளிப்படுத்தி யுள்ளது. ஆனால், செட்டிபாளையம் பேரூராட்சி நிர்வாகம் இந்த பொய்யை அம்பலப்படுத்தி, பாஜகவின் முகத்தி ரையை கிழித்துள்ளது. பேரூராட்சி தலைவர் இது குறித்து கூறுகையில், “இது எதிர்க்கட்சியின் காழ்ப்புணர்ச்சி. தனியார் நிறுவனம் இங்கு குழாய் அமைத்தது. பேரூராட்சி எந்த ஆழ்துளை கிணறு பணியையும் செய்யவில்லை,” என்று விளக்கம் அளித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் மக் கள் தொடர்பு துறை மூலம் வெளியிட்ட அறிக்கையில், பல்லடம் பிரதான சாலை யில் இந்து சமய அறநிலைத் துறை நிலத்தில் 5000 மரக்கன்றுகள் நடும் பணிக்காக தமிழ்நாடு கிரஷர் அசோசி யேட்ஸ் மூலம் இரண்டு ஆழ்துளை கிணறுகள் ஏற்கனவே அமைக்கப் பட்டது. மேலும், ஒரு ஆழ்துளை கிணறு தோண்ட முயற்சித்தபோது, ஏற்கனவே அமைத்துள்ள ஆழ்துளை கிணற்றின் மூலம் போதுமான நீர் கிடைப்பதால் கூடுதல் கிணறு தேவையில்லை என மூடிவிட்டு சென்றனர். இந்த ஆழ்துளை கிணறுகள் அமைக்க பேரூராட்சி ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை. பாஜகவின் குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது என தெளிவுபடுத்தியுள் ளது. இந்நிலையில், பொய்யான தக வலை பரப்பிய உள்ளூர் பாஜவினர் வீடியோ எடுத்து பரப்பிய நிலையில், அதனை அக்கட்சியின் பாஜக தலை வர் தனது வலைப்பக்கத்தில் பகிர்ந் துள்ள நிலையில், இதனை கண்ட நெட்டி சன்கள் பாஜகவினரை வறுத்தெடுத்து வருகின்றனர்.
அரசு மருத்துவமனையில் குடிநீர் தட்டுப்பாடு
கோவை, ஜூன் 21 – கோவை அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் வந்து செல்லும் பகுதியில் குடிநீர் விநியோகிக்கும் ஏற்பாடு இல்லாததால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக் குள்ளாகின்றனர். தமிழகத்தின் கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் கேரளத் தின் பாலக்காடு போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினசரி 2,000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வரும் நிலை யில், மருத்துவமனை வளாகத்திலேயே குடிநீர் கிடைக்காமல் வெளியிலிருந்து பணம் கொடுத்து குடிநீர் வாங்க வேண் டிய அவல நிலை இருப்பதாக, மருத்துவமனைக்கு வரும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் புறநோயாளிகள் வந்து செல் லும் பகுதிகளில் உடனடியாக குடிநீர் விநியோகத்திற்கான ஏற் பாடுகளை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மோசடி - கைது
கோவை, ஜுன் 21- குறைந்த விலையில் புதிய தங்க நகை வாங்கி தருவ தாக கூறி 3 லட்சம் நகை மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம், ரத்தினபுரியில் உள்ள பக்தவச்ச லம் தெருவை சேர்ந்தவர் பிச்சை. இவரது மனைவி புஷ்ப லதா (54). இவரிடம் காரமடை பகுதியைச் சேர்ந்த அமுதா (44) என்பவர் பழக்கமானார். அப்போது அமுதா புஷ்பலதாவி டம் அவர் வைத்து இருக்கும் நகைகளுக்கு பதில் குறைந்த விலைக்கு புதிய தங்க நகைகள் வாங்கித் தருவதாக கூறி உள்ளார். இதை நம்பிய புஷ்பலதா அவரிடம் 59 கிராம் தங்க நகையை கொடுத்து உள்ளார். அதன் பிறகு நகைகளை அருகில் உள்ள நிதி நிறுவனத்தில் புஷ்பலதா பெயரில் அடகு வைத்து 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று உள்ளார். ஆனால் அதன் பிறகு அடகு வைத்த நிதி நிறுவனத்தில் இருந்து நகைகளை அமுதா மீண்டும் பெற்றுக் கொண்டு சென்று விட் டார். புஷ்பலதா அவரிடம் தனக்கு புதிய நகைகளை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக கூறி விட்டு ஏமாற்றியது குறித்து கேட்டு உள்ளார். இதற்கு அமுதா சரியாக பதில் அளிக்கவில்லை. 1 மாதம் ஆகியும் நகையை வாங்கிக் கொடுக்காததால் புஷ்பலதா ரத் தினபுரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து அமுதாவை கைது செய்தனர்.