tamilnadu

img

விவசாயிகளின் போராட்டம் மோடி அரசை மண்டியிட வைத்தது

விவசாயிகளின் போராட்டம் மோடி அரசை மண்டியிட வைத்தது

திருப்பூர் பிரச்சாரக் கூட்டத்தில் டி.ரவீந்திரன் பெருமிதம்

திருப்பூர், ஜூன் 16 - தமிழ்நாடு முழுவதும் ஜூன் 11 முதல் 20 வரை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் நடை பெறும் பிரச்சார இயக்கத்தின் ஒரு  பகுதியாக, திருப்பூர் வடக்கு ஒன்றி யம் சார்பில் பாண்டியன் நகரில் ஞாயிறு அன்று பொதுக்கூட்டம் நடை பெற்றது. ஒன்றியக்குழு உறுப்பினர் என்.இளங்கோ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலை வர்கள் மோடி அரசின் கொள்கை களுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். அரசியலமைப்பு மீறல் குறித்து டி.ரவீந்திரன் எச்சரிக்கை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் தனது  உரையில், “பிரிட்டிஷ் ஏகாதிபத்தி யத்திற்கு எதிராக பல்வேறு தியா கங்கள் மூலம் இந்திய நாடு விடு தலை பெற்றது. இது அனை வருக்குமான நாடாக கட்டமைக்கப் பட்டது. ஒரு மதச்சார்பற்ற நாடாக அனைத்து மதத்தினருக்கும் சமமான உரிமையை இந்திய அரசி யலமைப்பு வழங்குகிறது” என்று குறிப்பிட்டார். அரசியலமைப்பின் பிரிவுகள் 14, 15, 16- ஆகியவற்றால் மதம்  அடிப்படையில் பாரபட்சம் பார்க்கக் கூடாது என்றும், சமமான சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக அவர் எடுத்துரைத்தார். “இதை ஏற்றுக்கொண்டதால்தான் மோடி உட்பட அனைத்து அமைச்சர்களும் ஆட்சியில் உள்ளனர். ஆனால் இதே அரசியலமைப்பை சீர்குலைக்க ஆர்எஸ்எஸ் திட்டமிடுகிறது. அதை பாஜக செயல்படுத்த துடிக்கிறது” என்று குற்றம் சாட்டினார். கல்வி காவிமயமாக்கல் குறித்த அச்சம் கல்வித் துறையில் நடைபெறும் மாற்றங்கள் குறித்து டி.ரவீந்திரன் கவலை தெரிவித்து, “கல்வியை காவிமயமாக்க விரும்புகிறார்கள். புராணத்தை வரலாறாகவும், வர லாற்றை புராணமாகவும் கொண்டு வர முயல்கிறார்கள். அறிவிய லுக்கு புறம்பான பல்வேறு கட்டுக் கதைகளை பாடங்களில் புகுத்து கிறார்கள்” என்று தெரிவித்தார். விவசாயிகளின் வெற்றிகரமான போராட்டம் விவசாய சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டது குறித்து பெருமித த்துடன் பேசிய டி.ரவீந்திரன், “ஒரு கமாவை கூட திருத்த மாட்டோம் எனக் கூறிய விவசாய விரோத சட்டங்களை விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் திரும்பப் பெறப் பட்டுள்ளது. நாடாளுமன்றத்துக்கு உள்ளே நிறைவேற்றப்பட்ட ஒரு  சட்டம் நாடாளுமன்ற வளாகத்து க்கு வெளியே நடைபெற்ற போராட்ட த்தால் திரும்ப பெறப்பட்ட வரலாறு விவசாயிகளின் தியாகத்தால் நடந்தது” என்று குறிப்பிட்டார். இந்தப் போராட்டத்தில் 715 விவசாயிகள் உயிரிழந்ததையும் அவர் விவரித்தார். தொழிலாளர் சட்டங்களுக்கு எதிரான எச்சரிக்கை தற்போது இந்தியா முழுவதும் உள்ள தொழிற்சங்கத்தினர் நான்கு புதிய தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களை எதிர்த்து ஜூலை 9 ஆம் தேதி போராட்டம் நடத்தவுள்ளதாக அவர் அறிவித்தார்.  திருப்பூர் தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் ஜிஎஸ்டி வரி என்றும், கடந்த 10  ஆண்டுகளில் நிரந்தர தொழி லாளர்கள் குறைக்கப்பட்டு, ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக் காட்டினார். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் மோடி அரசு கொண்டுவந்துள்ள ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவ தாக சுட்டிக்காட்டிய டி.ரவீந்திரன், “இதனால் 25 லட்சம் பம்ப்செட் வைத்துள்ள விவசாயிகள் பாதிக்கப் படுவார்கள். இலவச மின்சாரம் ரத்தாகும். தமிழ்நாடு அரசு இதை கைவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். மதம் மூலம் திசை திருப்பல் : செ.முத்துக்கண்ணன் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் தனது உரையில், “நெருக்கடியில் உள்ள மக்களை திசைதிருப்ப மதத்தை பயன்படுத்துகிறார்கள். இப்போது கூட தமிழ்நாட்டில் திடீரென  முருகனைக் காப்பாற்ற கிளம்பி விட் டார்கள்” என்று குற்றம்சாட்டினார். மதச்சார்பற்ற நாடு எனக் கூறும் அரசியல் சாசனத்தின் மூலம் உறுதி மொழி ஏற்றுக்கொண்டு அமைச்சராக பொறுப்பு வகிக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா முருகன் மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பதை அவர் விமர்சித்தார். பெருங்கடல் மாசுபாடு குறித்த கவலை கார்ப்பரேட் நிறுவனங்கள் பயன்படுத்தும் மீன்பிடி வலைகள் மக்குவதற்கு 600 ஆண்டுகள் ஆகும் என்று குறிப்பிட்ட செ.முத்துக் கண்ணன், “இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 400 டன் வலை கள் கடல்களில் கொட்டப்படு கிறது. மறுபுறம் எளிய மீனவர்கள் கிழிந்த வலைகளை மீண்டும் தைத்து பயன் படுத்துகின்றனர். இதை அரசு முறை யாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார். பொருளாதார சுரண்டல் குறித்த குற்றச்சாட்டு “ஒருபுறம் கார்ப்பரேட்டுகளுக்கு வரி சலுகைகள் தருவதும், மறுபுறம் எளிய மக்களிடமிருந்து பல்வேறு வரி களை வசூலிப்பதும் தொடர்கதை யாக உள்ளது” என்று செ.முத்துக் கண்ணன் குற்றம் சாட்டினார்.  கேஸ் விலை உயர்வு குறித்து பேசிய அவர், “450 ரூபாய்க்கு விற்ற  கேஸ் தற்போது 900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. காலை முதல் இரவு  தூங்கும் வரை நம்மிடம் இருந்து பல லட்சம் கோடி வரியாக மோடி அரசு வசூலிக்கிறது. ஆனால் கல்வி சுகா தாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவை களுக்கு செலவு செய்வது மிக சொற்பமே” என்று தெரிவித்தார்.  இந்த பொதுக்கூட்டத்தில் மாநி லக்குழு உறுப்பினர் சம்சீர் அகமது, வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப்பன், மாவட்டக்குழு உறுப்பினர் எ.சிகாமணி உள்ளிட் டோர் கட்சியின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.