tamilnadu

கோயம்பேடு சந்தையை திறக்க வலியுறுத்தல்

சென்னையில் கோயம்பேடு சந்தையை திறக்கக்கோரி சி.எம்.டி.ஏ அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயம்பேடு சந்தை திருமழிசை மற்றும் மாதவரம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால், வியாபாரிகள் அனைவருக்கும் கடைகள் ஒதுக்கவில்ல. இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க கோரி 200க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள் சிஎம்டிஏ அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.