உதகை, மே 23 - பந்தலூர் அருகே காட்டு யானை ஒன்று வீட்டை சேதப் படுத்தியதால் அப்பகுதி யினர் அச்சமடைந்துள்ளனர். பந்தலூர் அருகிலுள்ள மழவன் சேரம்பாடி எனுமி டத்தில் வசிக்கும் ஆறுமுகம் என்பவரின் வீட்டை வெள்ளி யன்று காட்டு யானை ஒன்று தாக்கியது. இதில் அவரின் வீடு முற்றிலும் சேதமடைந் தது. இதற்கிடையே அதே பகுதியில் வசிக்கும் சேகர் என்பவரது மனைவி ஞான சுந்தரி (45) என்பவர் காட்டு யானை வருவதை கண்டு அங்கிருந்து தப்பிக்க ஓடினார். அப்போது தவறி விழுந்த அவருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இதுகுறித்து வரு வாய் ஆய்வாளர் காமு மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்தை பார்வை யிட்டு விசாரணை நடத்தி வரு கின்றனர்.