கோவை, செப். 5– வ.உ.சிதம்பரனாரின் 149 பிறந்த நாளையொட்டி சனியன்று கோவை மத்திய சிறையில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் சிஐடியுவினர் மாலை அணிவித்து மலர்த்தூவி மரி யாதை செய்தனர். இந்திய விடுதலைப் போராட்டத் திற்கு உத்வேகத்தை அளிக்கும் வகை யில் சுதேசி கப்பலை இயக்கியவர் வ.உ.சிதம்பரனார். இவரை ஆங்கி லேய அரசு கைது செய்து கோவை மத் திய சிறையில் அடைத்தது. தற்போது அவர் அடைக்கப்பட்டிருந்த சிறை கொட்டகை, நினைவு மண்டபமாக மாற்றப்பட்டு அவர் இழுத்த செக்கு மக்களின் பார்வைக்காக வைக்கப்பட் டுள்ளது. இந்நிலையில், வ.உ.சியின் 149வது பிறந்த நாளான சனியன்று சிறைச்சாலையிலுள்ள அவரது உருவ சிலைக்கு அரசியல் கட்சியினர், பொது மக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி னர்.
இதன்பின் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் வ.உ.சியின் நினைவாக உள்ள செக் மற்றும் அவ ரது உருவச்சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர். இந் நிகழ்ச்சியில், சிஐடியு மாவட்டத் தலை வர் சி.பத்மநாபன், செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் கே. ரத்தினகுமார், எம்.கே.முத்துக்குமார், இராமமூர்த்தி உள்ளிட்ட ஏராளமா னோர் பங்கேற்றனர். இதேபோன்று இந்திய தேசிய காங் கிரஸ் கட்சியின் மாநில செயல் தலை வர் மயூரா.ஜெயக்குமார், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம் மன் அர்ச்சுணன், கலை இலக்கிய பெரு மன்றத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்று வ.உ.சி.க்கு மரி யாதை செலுத்தினர்.