சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் கண்ணீர் மல்க முறையீடு
சேலம், நவ. 4- சேலம் அரசு மருத்துவமனையில் உரிய காலத்தில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் காய்ச்சலால் பாதிக்கப் பட்ட சிறுவன் கோமா நிலைக்கு சென்றதாக பெற்றோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க முறையிட்டனர். சேலம் சிவதாபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவ ரது மனைவி மைதிலி. இத்தம்பதியி னரின் மகனான ஹரி குகன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதைய டுத்து அவரது பெற்றோர் அச்சிறு வனை சேலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனும திக்க முயன்றுள்ளனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர் கள், இது சாதாரண காய்ச்சல் என் றும், தற்போது அனுமதிக்கப்படும் அளவுக்கு காய்ச்சல் இல்லை எனக் கூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து வீட்டுக்குச் சென்ற ஹரி குகனுக்கு இரண்டு முறை வலிப்பு ஏற்பட்டுள்ளது. இத னையடுத்து மீண்டும் பெற்றோர் ஹரி குகனை சேலம் அரசு மருத்து வமனைக்கு அழைத்து வந்துள்ள னர். அப்போதும், அவரை பரி சோதித்த மருத்துவர்கள் மீண் டும் சிறுவனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளனர். இத னால் செய்வதறியாது அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பெங்களூ ருக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை யளிக்கப்பட்ட நிலையில் காய்ச்சல் குறைந்துள்ளது. அதேநேரம், ஆரம்ப கட்ட சிகிச்சை எடுக்காததால் சிறுவன் ஹரி குகன் கோமா நிலைக்கு சென் றதாக மருத்துவர்கள் தெரிவித்துள் ளனர். இதனால் அதிர்ந்துபோன பெற்றோர், தங்களது குழந்தையை வேறு வழியின்றி மீண்டும் சேலத்திற்கே அழைத்து வந்துள்ள னர். இதன்பின் பல மருத்துவம னைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், தனியார் மருத்துவமனை யில் சிகிச்சைக்கு அதிகளவு பணம் தேவைப்படும் நிலையில், அவரது பெற்றோர் பெரும் மனஉளைச்ச லுக்கு ஆளாகியுள்ளனர்.
இதையடுத்து ஹரி குகனின் பெற்றோர் மற்றும் அவரது குடும் பத்தார் திங்களன்று மாவட்ட ஆட் சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து கண்ணீர் மல்க போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அரசு மருத்துவமனை யில் அலைகழிக்கப்பட்டதன் கார ணமாகவே தன் மகனுக்கு இது போன்ற நிலைமை ஏற்பட்டதாக வும், தன் மகனை காப்பாற்ற வேண் டுமென்றும் கூறி ஹரி குகனின் பெற்றோர் கதறி அழுதனர். இதனை யடுத்துசம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர் களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து கோமா நிலைக்கு சென்ற சிறுவனை ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் காரண மாக ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் சோகமும், பரபரப்பும் ஏற் பட்டது.