கோவை, ஜூலை 8– தியாகி முத்துவின் 66 ஆம் ஆண்டு நினைவுதினம் ஞாயிறன்று சிபிஎம், சிபிஐ கட்சிகள் இணைந்து அனுசரிக் கப்பட்டது. பஞ்சாலை தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டத்தில் செங் கொடியேந்தி முன்னின்றவர் உப்பிலி யபாளையம் தியாகி முத்து. இதன்கார ணமாகவே பஞ்சாலை முதலாளிகள் ஏவிய குண்டர்களால் 66 ஆண்டுக ளுக்கு முன்பு ஜூலை 7 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். செங் கொடிப்புதல்வன் உப்பிலியபாளை யம் தியாகி முத்துவின் நினைவு தினத்தை ஒவ்வொரு ஆண்டும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நினைவு தின பொதுக்கூட்டம் நடத் தப்பட்டு வருகிறது. இதன்படி உப்பிலிபாளையம் தியாகி முத்துவின் 66வது நினைவு தினமான ஞாயிறன்று அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் கொடியை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொருளாளர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.ஆறுமுக மும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியை மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மனோகரனும் ஏற்றி வைத்தனர். இதனைத்தொடர்ந்து உப்பிலிய பாளையம் பூங்கா திடலில் நினை வேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற் றது. சிபிஐ கிளை செயலாளர் எம்.தங்க வேல் தலைமை வகித்தார். சிபிஎம் கிளை செயலாளர் வி.பி.நாகேந்திரன் முன்னிலை வகித்தார். சிபிஎம் சிங்கை நகரக்குழு உறுப்பினர் ஏ.தமிழ்செல் வன் வரவேற்புரையாற்றினார். இதில் சிபிஐ மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், நிர்வாகக்குழு உறுப் பினர் ஜி.நாராயணசாமி, கிழக்கு மண்டல செயலாளர் மு.வ.கல்யாண சுந்தரம் ஆகியோரும், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மனோக ரன், சிங்கை நகரக்குழு செயலாளர் வி.தெய்வேந்திரன், பீளமேடு நகரக் குழு செயலாளர் கே.பாண்டியன் ஆகி யோர் உரையாற்றினர். நிறைவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில பொருளா ளர் எம்.ஆறுமுகம் ஆகியோர் சிறப் புரையாற்றினர்.
முன்னதாக பி.ஆர்.நடராஜன் எம்பி பேசுகையில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. கடந்த முறை 31 சதவிகித வாக்கு களை பெற்ற பாஜக, இம்முறை 7 சத விகிதம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்று அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. இரண்டாவது முறையாக அதிகாரத்திற்கு வந்துள்ள பாஜக தனதுபாசிச சித்தாந்தத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்தும். இதனை இடதுசாரிகள் தீவிரத்தோடு எதிர்கொண்டு இந்திய மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை நம்முன் உள்ளது. நாடாளுமன்றத்தில் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் ஏழைகளுக் கான பட்ஜெட் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இந்த பட்ஜெட்டில் வரலாறு காணாத வகை யில் வேலையின்மை சுருங்கிப்போய் உள்ள நிலையில், வேலை வாய்ப்பு குறித்த ஒருவார்த்தைகூட பட்ஜெட் டில் சொல்லப்படவில்லை. மேலும் நூறு நாள் வேலை திட்டத்தில் நிதி குறைப்பு, ஆதிதிராவிட மாணவர்க ளின் கல்வி உதவிக்கான நிதி குறைப்பு, தூய்மை இந்தியாவிற்கான நிதி குறைப்பு, வேலைவாய்ப்பை அளிக் கும் சிறுகுறு தொழில்களின் நசிவுக்குக் காரணமான ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மாற்றம் செய்யப்படவில்லை. மாறாக எரி பொருளுக்கான விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் 250 கோடி ரூபாய்க்கு 25 சதவிகித வரி என்பதை மாற்றி ரூ.400 கோடிக்கு 25 சதவிகித வரி செலுத்த வேண்டும் என மாற்றப்பட்டுள்ளது. இந்திய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை ரூ.1லட்சத்து 5 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட் டுள்ளது. இதன் காரணமாகத்தான் சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு தீவிரப் படுத்தி வருகிறது. இதனை எதிர்த்து அங்கு தொழிலாளர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர். 2008 ஆண்டு சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உலகத்தின் பல நாடுகளை புரட்டிப்போட்டது. ஆனால் இந்தியாவில் அத்தகைய ஆபத்து ஏற்படவில்லை. காரணம் வங்கி, எல்ஐசி உள்ளிட்ட அனைத்து துறைகளும் அரசின் வசம் இருந்த தால் நமது நாடு நெருக்கடியில் சிக்க வில்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன் சொன்னதை நாம் அறிவோம். ஆனால் தற்போது மோடி அரசு நெருக்கடியில் சிக்குவோம் என்று தெரிந்தே இந்திய நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை விற்கத் துடிக்கிறது. கார்ப்ரேட்டுகளின் லாப வெறிக்கு நமது மக்களின் சொத்தை விற்பதற்கு ஒருபோதும் நாம் அனு மதிக்கக்கூடாது. இதனை எதிர்த்த போராட்டத்தில் இடதுசாரி கட்சிகள் முன்னைக்காட்டிலும் முனைப்பாக ஒன்றுபட்டு மக்களை திரட்டி போராட் டத்தை முன்னெடுக்க வேண்டும். அதுவே தியாகி முத்துவிற்கு செலுத் தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என நிறைவு செய்தார். முடிவில் சிபிஐ துணை செயலாளர் கே.பார்த்தசாரதி நன்றி கூறினார்.