tamilnadu

img

சாக்கடை கழிவுநீரை வெளியேற்றக்கோரி காத்திருக்கும் போராட்டம்

ஈரோடு, ஆக. 5 - கல்லாஞ்சரளை பகுதியில் கழிவு நீரை வெளியேற்றக் கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பொதுமக்களுடன் இணைந்து திங்க ளன்று பள்ளபாளையம் பேரூராட்சி முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்தில் கல்லாஞ்சரளை பகுதியில் உள்ள சாக்கடை கழிவுநீரை நிரந்தரமாக வெளியேற்ற வேண் டும் என வலியுறுத்தி நடைபெற்ற காத்திருக்கும் போரட்டத் திற்கு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தாலுகா தலைவர் பி.கருப்பன் தலைமை வகித்தார். சிபிஎம் தாலுகா செயலா ளர் கே.குப்புசாமி போராட்டத்தைத் துவக்கி வைத்தார். விவ சாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.ஆர்.விஜயராகவன், சிஐடியு மாவட்ட துணைசெய லாளர் கே.ரவி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.எ.விஸ்வநாதன், மாதர் சங்கத்தின் தாலுகா செயலாளர் கே.ஜெயலட்சுமி, தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தில் தாலுகா செயலாளர் பி.முத்துபழனிசாமி, மாதர் சங்கத்தின் தாலுகா தலைவர் ஜி.பங்கஜம்  உட்பட பலர் கலந்து கொண்டனர். அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி மூன்று மாதங்க ளில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன டிப்படையில் அனைவரும் கலைந்து சென்றனர்.