tamilnadu

img

பெரியார் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பாஜக பிரமுகரை கைது செய்யக்கோரி எஸ்.பி அலுவலகம் முற்றுகை

கோவை, ஜூலை 24 -  பெரியார் குறித்து சமூக வலை தளங்களில் அவதூறு பரப்பிய பாரதிய ஜனதா கட்சி பிரமுகரை கைது செய் யக்கோரி பெரியாரிய, தலித் அமைப்பு கள் கோவை மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகை யிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை அன்னூர் பகுதியைச் சேர்ந்த “ஹேர் லைன்ஸ் நந்தா” என்ற பெயரில் முகநூலில் செயல்படும் நந்தா என்ற பாஜக பிரமுகர் கடந்த திங்க ளன்று பெரியார் குறித்து அவதூறு பரப் பும் வகையில் முகநூலில் பதிவிட்டுள் ளார்.

இதுகுறித்து முற்போக்கு அமைப் பினர் புகார் அளித்தும் காவல்துறை யினர் எவ்வித நடவடிக்கையும் எடுக் காததால் அன்னூர் காவல் நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனைத்தொடர்ந்து நந்தா மீது 3 பிரிவுகளின் கீழ் அன்னூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த னர்.

 இந்நிலையில், தற்போது வரை நந்தா கைது செய்யபடவில்லை. இத னைக் கண்டித்தும், பாஜக உறுப்பி னரை உடனடியாக கைது செய்யக் கோரியும் பெரியாரிய, தலித் அமைப்பு களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற் பட்டோர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட முயன்றனர்.

இதனைத்தொ டர்ந்து, துணை காவல் கண்காணிப் பாளர் அனிதா போராட்டக்காரர்களு டன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தார். இதனைத்தொ டர்ந்து போராட்டத்தை விட்டு அனை வரும் கலைந்து சென்றனர்.

முன்னதாக, இதே பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவர் கந்த சஷ்டி கவசம் குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக இந்து முன்ன ணியினர் அளித்த புகாரின் பேரில் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த அன்னூர் போலீசார் அவரை உடனடியாக கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.