tamilnadu

img

அரசு அமைப்புபோல செயல்படும் சேவாபாரதி

மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் புறக்கணிப்பு

குமரி மாவட்ட ஆட்சியரிடம் சிபிஎம் புகார்

நாகர்கோவில், மே.15- கோவிட் நிவாரண பணிகளில் மக்கள் பிரதி நிதிகள், தன்னார்வலர்கள் புறக்கணிக்கப்படு வதாகவும், பாரதிய ஜனதா கட்சியின் துணை அமைப்புகளான சேவாபாரதி போன்றவை அரசு அமைப்புகளை போல செயல்பட ஒரு தலைபட்சமாக அனுமதிக்கப்படுவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட் டக்குழு குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரேவிடம் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில், கோவிட் 19 பெருந்தொற்று குறித்த விழிப்புணர்வு, நோய்தடுப்பு, குணப்படுத்தும் பணிகளில், தன்னலம் மறந்து, ஓயாது அர்ப்பணிப்புடன் பணியாற்றும், மருத்துவ பெருமக்கள், செவி லியர்கள், இதரவகை மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், இரவு பகலாய் பணி யாற்றும் காவல்துறையினர், வருவாய் மற்றும் இதர அரசு துறைகளின் அதிகாரிகள், பணி யாளர்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வணக்கத்தையும், பாராட்டுக் களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.  மேலும் குமரி மாவட்டத்தில் கோவிட் 19 பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் துவக்கம் முதலே மாவட்ட நிர்வாகம் தன்னிச்சை யாகவே நடவடிக்கைகளை மேற்கொண்டு வரு கிறது. மாவட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளான சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளு மன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பங்க ளிப்பை, விருப்பத்தை பல தடவைகள் தெரி வித்தும் கூட, அவர்களின் பங்களிப்பையோ, ஆலோசனைகளையோ மாவட்ட நிர்வாகம் பயன்படுத்த விரும்பவில்லை.  பொதுமக்களுக்கு நோய் குறித்த விழிப்பு ணர்வு ஏற்படுத்துதல், தனிமனித இடைவெளி பராமரிப்பு, அத்தியாவசிய பொருட்களின் விநி யோகம், பசிப்பிணி அகற்றுதல், நோய்தடுப்பு ஆகிய ஏராளமான பணிகளை செய்வதற்கு அர்ப்பணிப்போடு முன்வந்த தன்னார்வ லர்களை மாவட்ட நிர்வாகம் பயன்படுத்த வில்லை. மாறாக அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படும் பாரதிய ஜனதா கட்சியின் துணை அமைப்புகளான சேவாபாரதி போன்ற அமைப்புகள், அரசு அமைப்புகளை போல செயல்பட ஒருதலைபட்சமாக அனுமதிக்கப்படு கிறது.

கடை திறப்பில் குளறுபடி

மூன்றாவது ஊரடங்கு காலத்தின், பிற்பகுதி யில் பொருளாதார நடவடிக்கைகளை துவங்கு வதற்காக அரசு சில தளர்த்துதல் நடவடிக்கை களை அறிவித்தது. அதன்படி கடந்த மே 4 ஆம் தேதி முதல் தனிக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட லாம் என்றும் அதற்கு மாவட்ட ஆட்சியரின் தனி அனுமதி தேவையில்லை என்றும் அரசு அறி வித்தது. அதன்படி கடைகளை திறந்த வணி கர்கள் காவல்துறையால் அச்சுறுத்தப்பட்டு கடைகளை மீண்டும் அடைக்கச் செய்தனர். அரசின் உத்தரவின்படியும் இல்லாமல், என்ன அடிப்படை என்ற எந்த விபரங்களும் சொல்லா மல் மே 9 ஆம் தேதி தான் தனி கடைகளைத் திறக்க வேண்டுமென்றும் அதுவும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை என்றும் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மே 7 இல் டாஸ்மாக் கடைகளை திறக்கும் அரசின் முடிவு மட்டும் கறாராக அமல்படுத் தப்பட்டது. மே 11 ஆம் தேதி முதல் தனிக் கடைகள் அனைத்தும் காலை 10 முதல் மாலை 7 மணி வரை இயங்கலாம், டீ கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை பார்சல் வழங்கும் வகையில் இயங்கலாம் என்ற அரசின் உத்தரவுகளுக்கும் புறம்பாக தனிக்கடைகள் 5 மணி வரை இயங்க வேண்டும், டீ கடைகள் காலை 10 மணிக்கு மேல் தான் திறக்க வேண்டும் போன்ற மாவட்ட நிர்வா கத்தின் அறிவிப்புகள் வியாபாரத்தை பற்றிய அனுபவ குறைபாட்டை பிரதிபலிக்கின்றது. மாநிலம் முழுவதும் அச்சகங்கள் இயங்கலாம் என்று அரசு அறிவித்தது. நகரத்தின் அச்ச கங்கள், மாநகராட்சியின் போஸ்டர்களை, பிர சுரங்களை மட்டுமே அடிக்கலாம், வேறு எதை யும் அச்சடிக்க கூடாது என நாகர்கோவில் மாநக ராட்சி ஆணையர் உத்தரவிடுகிறார். 

இப்படி தானடித்த மூப்பாக அரசு உத்தரவு களுக்கு சம்பந்தமில்லாதபடி செய்யப்படும் அறி விப்புகளை தவிர்க்கும்படியும் இம்மாவட்ட மக்க ளின் மீது மிகுந்த அக்கறையும், மாவட்டத்தின் அனைத்து விபரங்களையும் தெரிந்த மக்கள் பிரதிநிதிகள், வர்த்தக பிரதிநிதிகள், தொழிலக பிரதிநிதிகள் உள்ளடக்கிய ஆலோசனை குழுவை அமைத்து, ஆலோசனைகளை பெற்று அதனடிப்படையில் நடவடிக்கைகளை திட்டமிட வேண்டும் என்றும், சேவை மனன் பான்மையுடன் அரசியலுக்கு அப்பாற்பட்டு பணி செய்ய முன் வரும் அனைத்து தன்னார்வலர் களையும் பயன்படுத்திட வேண்டும்.

டீக்கடைகள் செயல்பட அனுமதி

நோய்தொற்று அகன்ற பின்பும், அரசு அறிவித்த காலக்கெடு முடிந்த பிறகும் மூடி வைத்திருக்கும் பகுதிகளை திறந்துவிட வேண்டும் என்றும், வெளிமாவட்டங்களிலி ருந்து வந்து தனிமைப்படுத்தி ஆங்காங்கே தங்க வைத்துள்ள மக்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டு மென்றும், அரசு அறிவிப்புகளின்படி தனிக்கடை கள், டீக்கடைகள் மற்றும் தொழிலகங்கள் இயங்கிட அனுமதித்திட வேண்டுமென்றும், நகரின் தெருக்களில் இரவு நேரங்களில் காவல்துறை ரோந்து நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.முரு கேசன், ஏ.வி.பெல்லார்மின், எம்.அகமது உசேன், என்.எஸ்.கண்ணன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.