tamilnadu

img

மதச்சார்பின்மை, அமைதியை பேசாமல் தூய்மையை மட்டும் பேசுவதா

ஆர்.நல்லக்கண்ணு விமர்சனம்


கோவை, அக்.2– காந்தி பிறந்த நாளில் மதச்சார்பின்மை, அமைதி குறித்து பேசாமல் மத்திய பாஜக அரசு தூய்மை குறித்து மட்டும்  பேசுவதாக சிபிஐ மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு விமர்சித்தார்.  கோவை இடையர்பாளையம் பகுதியில் உள்ள காந்தியடிகள் கல்வி நிறுவனம் மற்றும் காந்தியடிகள் தமிழ் பண்பாட்டு மையம் சார்பில் புதனன்று இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு சிலம்பு செல்வர் ம.பொ.சி. விருது வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆர்.நல்லக்கண்ணு செய்தியா ளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ கத்தில் ஒவ்வொரு துறையிலும் தமிழ் மொழியின் முக்கி யத்துவத்தை குறைந்து வருகிறது. நீதிபதி பதவி உள்ளிட்ட  துறைகளில் பிற மாநிலத்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படு கிறது. தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கு வாய்ப்புகள்  குறைக்கப்படுகிறது. கீழடி நாகரீகம் பாரத நாகரீகம் என்ற அமைச்சர் பாண்டியராஜனின் கருத்தை ஏற்கமுடியாது. இவருக்கு மேலே உள்ளவர்கள் சொல்வதையே அமைச்சரும் சொல்கிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாகரீகம் தமிழர் நாகரீகம் என்பது தொல்லியல் ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளது. ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதியளிப்பதால் தமிழகத்தின் நெல்களஞ்சியம் பாழாகும் என்பதாலேயே அதனை கைவிட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மேலும், காந்தி ஜெயந்தியில் மகாத்மா காந்தி முக்கி யத்துவம் அளித்த மதச்சார்பின்மை, அமைதி உள்ளிட்ட வைகளை மத்திய அரசு பரப்புவதற்கு மாறாக சுத்தம் தொடர்பாக மட்டுமே பேசுகிறது. எனவே காந்தியின் கருத்துக்களை முழுமையாக பரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். முன்னதாக இந்நிகழ்ச்சியில் முன்னாள் துணை வேந்தர் மார்க்கண்டன், கவிஞர் புவியரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.