கோவை, பிப்.12- கோவை மாவட்டம், சூலூரில் வட்டார அளவிலான தனி யார் வேலைவாய்ப்பு முகாம் சூலூர் ஆர்.வி.எஸ் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரி வித்துள்ளதாவது,தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்) மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்தும் சூலூர் வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம் சூலூர் ஆர்.வி.எஸ் கல்லூரி வளாகத்தில் பிப்.15 ஆம் தேதியன்று காலை 10.00 மணி முதல் 4.00 மணிவரை நடைபெறவுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங் களான ஐ.டி, ஆட்டோ மொபைல் கார்மென்ட்ஸ், கட்டுமா னம் மற்றும் விற்பனைத் துறை சார்ந்த நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளது. இதில் 8-ஆம் வகுப்பு முதல் தொழில்நுட்பக்கல்வி, பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலைப் பயின்ற படித்த இளைஞர்கள் தங்களது தகுதிச் சான்றுகளுடன் (அசல் மற்றும் நகல்களுடன்) கலந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.