அவிநாசி, டிச. 6- அவிநாசி அருகே மடத்துப்பாளை யம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையால் இடிந்து விழுந்த வீட்டினை ஆய்வு செய்த வருவாய்த்துறையினர் உதவி வழங்க மறுப்பு தெரிவித்தனர். அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட 1வது வார்டு பகுதியில் சுமார் நூற்றுக் கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் முன்னாள் கிராம உதவியாளர் ராசு (எ) ராயன் சுமார் 20 ஆண்டு களுக்கு மேலாக வசித்து வருகிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் ராயன் வீடு இடிந்து விழுந்தது. தகவலறிந்த கிராம நிர் வாக அதிகாரிகள் ராயன் வீட்டை ஆய்வு செய்ததில் இடிந்து விழுந்த வீட்டில் யாரும் குடியிருக்கவில்லை என கூறி உதவி வழங்க மறுப்பு தெரி வித்துள்ளனர்.