tamilnadu

img

பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தற்கொலை விசாரணைக்குழு அமைத்திடக்கோரி உண்ணாவிரதம்

சேலம், அக்.8- சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தற்கொலை தொடர்பாக உண்மை கண்டறிய விசாரணைக்குழு அமைக்கக்கோரி பல்கலைக்கழக தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் பெரியார் பல்கலைக்கழ கத்தில் பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளர்களின் ஊதியத்தை மாத ஊதியமாக வழங்க வேண் டும். தொழிலாளர்கள் வைப்பு நிதி  வழக்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். சேலம் பெரியார் பல் கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலைக்கு காரணமானவர்களை கண்டறிய விசாரணைக் குழு அமைத்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தொழிலாளர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதப் போராட் டம் நடைபெற்றது. இந்த போராட் டத்தில் சங்கத்தின் பொது செயலாளர் சக்திவேல், சட்ட ஆலோசகர் இளங்கோவன் உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர்.                                  முன்னதாக, இப்போராட்டத்தில் பங்கேற்றோர் கூறுகையில், எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்டங்களாக போராட்டங்கள் நடத் தினோம். ஆனால், இதுவரை பல் கலைக்கழக நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அலட் சியப் போக்குடன் செயல்படுகிறது. ஆகவே, பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து அழைத்துப் பேச வேண்டும். தவறும் பட்சத்தில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வருகை தரும் தமிழக ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்து போராட் டத்தில் ஈடுபடுவோம் என ஆவேச மாக தெரிவித்தனர்.