tamilnadu

img

பல்லகவுண்டன்பாளையம் அரசுப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தேர்வு

திருப்பூர், ஆக. 20 – திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், பல்லகவுண்டன்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தேர்தலில் நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பல்லகவுண்டன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களி டம் கட்டாய நன்கொடை வாங்கப்படு வதாக புகார் எழுந்தது. அத்துடன் பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ற பெயரில் பல்வேறு நன்கொடைகள் வாங்கப்பட்டுள்ளன. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பெற்றோர் மாவட்ட ஆட்சி யர், முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோருக்கு புகார் தெரிவித்தனர். இந்த புகாரின்பேரில், விசாரணை செய்த அடிப்படையில், விதிகளுக்குப் புறம்பாக வசூலித்த பணத்தை பெற்றோரிடம் திரும்ப ஒப்படைக்க வும், பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு முறையாக நிர்வாகிகள் தேர்வு செய்ய வும் அப்பள்ளித் தலைமை ஆசிரிய ருக்கு முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இதன்படி திங்களன்று பெற்றோர் ஆசிரியர் கழக தேர்தல் நடைபெற்றது. இதில் அரசுப் பள்ளியைப் பாதுகாப் போம் என்ற கோரிக்கையை முன் வைத்து, நன்கொடை வசூலுக்கு எதிராக நீதி கேட்ட பெற்றோர் தரப் பினர் போட்டியிட்டனர். இதில் தலை வராக ரவி (எ) கருப்புசாமி, துணைத்  தலைவராக தென்னரசு, பொருளாள ராக காமராஜ் ஆகியோர் தேர்வு செய் யப்பட்டனர். பல்வேறு விதமான அச்சுறுத்தல் களை மீறி அரசுப் பள்ளியைப் பாதுகாப்போம் என போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு, பல்லக வுண்டன்பாளையம் சிஐடியு இன்ஜினி யரிங் தொழிலாளர் சங்க அலுவல கத்தில் பாராட்டுத் தெரிவிக்கப்பட் டது. இதில் ஊத்துக்குளி பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆர்.குமார், சிஐடியு இன்ஜினியரிங் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஜெ.கந்த சாமி,விவசாய சங்க மூத்த தலைவர் ஜோதி உள்பட சிஐடியு, மாணவர், வாலிபர் சங்கத்தினர் பங்கேற்று வெற்றி பெற்ற பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளை வாழ்த்தினர்.