tamilnadu

img

அங்கன்வாடி மையம் திறப்பு

நெகமம், ஜூலை 6- நெகமம் பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் திறந்து வைக்கப்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த  நெகமம் பேரூராட்சிக்குட் பட்ட சின்னேரிபாளை யத்தில் அங்கன்வாடி மையம் புதியதாக அமைப் கப்பட்டது. மேலும் புதி தாக குடிநீர் தொட்டி, சுற் றுச்சுவர் அமைக்கப்பட்டு அதன் திறப்புவிழா புதனன்று நடைபெற்றது.  குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கீதா தலை மையில் பேரூராட்சி இளநிலை பொறியாளர் நாகராஜ், மேற்பார்வையாளர் ராஜவேல், ஜெயப்பிரகாஷ் ஆகி யோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பேரூ ராட்சி எழுத்தர் சுந்தரவள்ளி வரவேற்று பேசினார். இதில் நெகமம் கூட்டுறவு சங்க தலைவர் கே.வி.பி.சோமசுந்தரம் கலந்து கொண்டு அங்கன்வாடி கட்டிடத்தை ரிப்பன் வெட்டி  திறந்து வைத்தார். முடிவில் அமைப்பாளர் சாவித்திரி நன்றி கூறினார்.