tamilnadu

புதிய கூலி ஒப்பந்தம் - நெசவாளர்கள் முடிவு

கோவை, அக்.5- கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த நெசவாளர்கள் புதிய கூலி ஒப்பந்தம் போட முடிவு செய்துள் ளனர். கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் விசைத் தறிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விசைத்தறிகளில் லட்சக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். பெரு நிறுவனங் களிடம் இருந்து கூலிக்கு துணியை நெய்து கொடுக்கும் பணியில் இவர்கள் ஈடுபட்டுள் ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டு நெசவாளர் களுக்கு ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி, உற்பத்தியில் சோமனூர் ரகங்க ளுக்கு 30 சதவிகிதம், இதர ரகங்களுக்கு 27  சதவிகிதம் என்று கூலி ஒப்பந்தம் போடப் பட்டது. ஆனால், இதுவரை ஒப்பந்த அடிப் படையில் இவர்களுக்கு கூலி வழங்கப்படு வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், புதிய கூலி ஒப்பந்தம் போட நெசவாளர்கள் முடிவு செய்துள்ளனர். விரைவில் அனைத்து நெசவாளர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு புதிய கூலி  ஒப்பந்தம் போடப்படும் என்றும், இதனை  நடைமுறைப்படுத்த அரசு தக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று நெசவாளர்கள் தெரிவித்துள்ளனர்.