தென் மாவட்டங்களுக்கான ரயில் சேவையை உடனே துவங்கிடுக
கோவை, அக். 23- கோவையிலிருந்து தென் மாவட்டங்களுக்கான ரயில் சேவையை மீண்டும் துவக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ரயில்வே போராட்டக்குழுவின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட கையெழுத்து இயக்கத்தை கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைத்தார். கோவை- பொள்ளாச்சி வழி யாக அகல ரயில்பாதை பணிகள் காரணமாக கோவையில் இருந்து ராமேஷ்வரம், தூத்துக்குடி, திரு நெல்வேலி உள்ளிட்ட மாவட்டங் களுக்கு சென்று கொண்டிருந்த ரயில்கள் நிறுத்தப்பட்டன. தற் போது அகல ரயில் பாதைக்கான பணிகள் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டது. இவ் வழியில் ரயில் சேவை துவங்கிய நிலையில் ஏற்கனவே தென் மாவட்டங்களுக்கு சென்று கொண்டிருந்த ரயில்கள் மீண்டும் இயக்கப்படவில்லை. மேலும், கோவை மக்களின் நீண்டகால கோரிக்கையான கோவை - பெங் களூர் இரவு நேர ரயில் சேவை என் கிற கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தென் மாவட் டங்களுக்கான ரயில் சேவை மற்றும் பெங்களூர் இரவு நேர ரயில் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து அரசியல் இயக்கங்கள் மற்றும் அமைப்பு கள் பங்கேற்ற ரயில்வே போராட் டக்குழு கூடி ஆலோசனை நடத் தினர். இதில் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி முதற்கட்டமாக பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்துவது என்றும், அடுத்தகட்டமாக ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் உள்ளிட்ட போராட் டங்களை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில், கோவை ரயில் நிலையத்தில் புதனன்று கையெழுத்து இயக்கம் நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினரும், ரயில்வே போராட்டக்குழுவின் தலைவருமான பி.ஆர்.நடராஜன் இந்த கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். இதில், திமுக சிங்காநல்லூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் நா.கார்த்திக், காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக் குமார், மதிமுக மாவட்ட செயலா ளர் ஆர்.ஆர்.மோகன்குமார், சிபிஐ மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந் தரம், சட்டமன்ற முன்னாள் உறுப் பினர் ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் யு.கே.சிவஞா னம், கிழக்கு நகரக்குழு செயலா ளர் என்.ஜாகீர், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளரும் ரயில்வே போராட் டக்குழு ஒருங்கிணைப்பாளரு மான கு.ராமகிருட்டிணன், விடு தலை சிறுத்தைகள் கட்சியின் இனியவன், குருநாத் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று ஆயி ரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்க ளிடம் கையெழுத்து பெற்றனர்.