கோவை புத்தக கண்காட்சி இன்று நிறைவு
கோவை, ஜூலை 27- கோவை கொடீசியா தொழில் முனைவோர் கூட்ட மைப்பும், பப்பாசி பதிப்பாளர் கூட்டமைப்பும் இணைந்து கொடிசியாவில் நடத்தி வரும் புத்தகத் திருவிழா ஞாயி றன்று நிறைவு பெறுகிறது. கொடிசியா மற்றும் பப்பாசி இணைந்து நடத்தும் புத்தக திருவிழா அவினாசி சாலையில் உள்ள கொடிசியா வணிக வளாகத்தில் கடந்த 19ஆம் தேதியன்று தொடங்கியது. இந்த புத்தக திருவிழாவில் 150 பதிப்பகங்கள், 250 விற் பனையகங்கள் பங்கெடுத்துள்ளன. குறிப்பாக, தமிழகத் தின் முன்னணி பதிப்பகமான பாரதி புத்தகலாயத்தின் புத்தக அரங்கு 45,46 அரங்கிலும், குழந்தைகளுக்கான அரங்கான புக்ஸ் ஆப் சில்ரன் அரங்கம் 71,72 ஆகிய அரங்கிலும் இடம் பெற்றுள்ளது. இதேபோல், புத்தக கண்காட்சியின் ஒவ்வொரு நாளும் பிரபல பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கலைக்குழு வினரும் கலந்து கொண்டு வாசிப்பை நேசிக்கும் விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிலையில், சுமார் ஒரு லட்சம் வாசகர்கள் பங்கேற்ற புத்தக திருவிழா ஞாயிறன்று நிறைவடைகிறது. பள்ளி, கல்லூரி மாணவர் கள் அதிகமாகக் கலந்து கொண்ட இக்கண்காட்சியில் தன்னம்பிக்கை, அரசியல், சுற்றுச்சூழல், வரலாறு, இலக்கி யம் சார்ந்த நூல்கள் அதிகம் விற்பனையானதாக விழா ஏற் பட்பாளர்கள் தெரிவித்தனர்.
ஏடிஎம்-யில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி கொள்ளையடிக்க முயற்சி
கோவை, ஜூலை 27- சூலூர் அருகே கனரா வங்கி ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டுள்ளது தெரியவந்ததை தொடர்ந்து காவல்துறையினர் அதனை கைப்பற்றி விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரி வில் கண்ணம்பாளையம் கனரா வங்கி ஏடிஎம் உள்ளது. அங்கு சனியன்று சிங்காநல்லூரை சேர்ந்த நந்தகுமார்(38) என்ற எலக்ட்ரீசியன் பணம் எடுக்க சென்றுள்ளார். அங்கு அவரது வங்கி அட்டையை சொருகியபோது அது இயந்திரத் தில் சிக்கிக்கொண்டது. அதை இழுத்தபோது கார்டுடன் சேர்ந்து இயந்திரத்தில் இருந்து ஒரு கருவி உடன் வந்துள் ளது. சந்தேகமடைந்த நந்தகுமார் ஏடிஎம் இயந்திரத்தை பார்த்தபோது அதில் கேமராவுடன் கூடிய ஒரு கருவி ஒட்டி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதைப் பிடுங்கிய நந்தகுமார் வங்கி மேலாளருக்கும், சூலூர் காவல் துறைக் கும் தகவல் கொடுத்துள்ளார். அங்கு வந்த சூலூர் சிறப்பு காவல் துறையினர் அந்த குறிப்பிட்ட இயந்திரத்தை ஆய்வு செய்தார். அப்போது ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சூலூர் காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தடுப்பணை உடைப்பு சீரமைக்கப்படுமா?
கோபி, ஜூலை 26- கோபி வட்டம், தூக்கநாய்க்கன்பாளையம் ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சி பகவதி நகரில் 2005-2006ம் ஆண்டில், மாவட்ட ஊரக வளர்ச்சிதுறை மூலம் சம்பூர்ண கிராம வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ 9.00 லட்சம் செலவில் கசிவு நீர் குட்டை தடுப்பணை கட்டப்பட்டது. அணைக்கட் டின் உட்பகுதி 10 அடி உயரமும் பின்பகுதி 6 அடி உயரமும் உள்ளது. இந்நிலையில், மழை பெய்து தண்ணீர் வந்த பிறகு குட்டையின் இருபுறமும் உடைப்பு ஏற்பட்டு பல ஆண்டுக ளாக நீர் தேங்காமல் வீணாகி வருகிறது. குட்டையின் இடது பக்கம் 10 அடியும், வலது புறம் 20 அடியும் உடைப்பு ஏற்பட் டுள்ளது. குட்டையின் கரை உடைப்பை சரி செய்து 3 முதல் 5 கி.மீட்டர் தூரம் நீர் தேங்கினால், சுமார் 50 முதல் 80 மில்லி யன் கன அடி வரை நீரை சேமிக்க முடியும். இதனால் சுற்று வட்டார பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். நூற்றுக் கும் மேற்பட்ட கிணறுகளில் நீர் மட்டம் உயரும். மேலும், வனவிலங்குகள் நீரில்லாமல் விவசாய நிலங்க ளில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. இவ்வாறு நீர் தேங்கி வனவிலங்குகளுக்கு குடிநீர் கிடைக்கும் நிலை உருவாகும் போது, விளை நிலங்களுக்கு சேதம் ஏற்படுவது தடுக்கப்படும். எனவே உரிய நடவடிக்கை மேற்கொண்டு உடைப்பை சரிசெய்து மழை நீர்தேங்க செய்ய வேண்டும் விவசாயிகளும், சமூக நல ஆர்வலர்களும் எதிர்பார்க்கின் றனர்.