tamilnadu

img

மக்கள் போராட்டங்கள்தான் ஆட்சியாளர்களின் கொள்கைகளை தீர்மானிக்கும்

திருப்பூர், ஜூன் 16 - தேர்தல் தோல்விகளால் நாங்கள் துவண்டு போக மாட்டோம், மக்களுக்கு சேவை செய்வ திலும், பாதகமான கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களை நடத்துவதிலும் எங்கள் பணி தொடரும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் பேசினார். திருப்பூர் வடக்கு மாநகருக்கு உட்பட்ட பிரிட்ஜ்வே காலனி பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்.உமாநாத் நினை வுப் படிப்பகம் திறப்பு விழா ஞாயிறன்று நடை பெற்றது. இவ்விழாவில் படிப்பகத்தைத் திறந்து வைத்து கே.தங்கவேல் கூறியதாவது: மக்கள் போராட்டங்களின் மூலமாகத்தான்  ஆட்சியாளர்களின் கொள்கைகள் தீர்மானிக் கப்படுகின்றன. கடந்த டிசம்பர் மாதம் ஐந்து மாநி லங்களில் பாஜக தோல்வி அடைந்த பிறகு அதை ஆய்வு செய்தனர். அதில் ராஜஸ்தான், மத்திய பிர தேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாய நெருக் கடியும், அதைத் தொடர்ந்து அவர்கள் நடத்திய போராட்டமும் தான் பாஜக தோல்விக்கு காரணம் என தெரியவந்தது. அதனால்தான் தற்போது விவ சாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளாக நிதி தரும் திட்டத்தை அமல்படுத்துவதாக கூறுகி றார்கள். பாஜக கருணையினால் இந்த திட்டங்களை அமலாக்கவில்லை. மக்கள் போராட்டம் தான் அரசியல் கொள்கைகளைத் தீர்மானிக்கும்.  தேர்தல் தோல்விகள் காரணமாக நாங்கள் துவண்டுபோக மாட்டோம், மக்களுக்குச் சேவை செய்வதிலும், போராட்டங்களை நடத்துவதிலும் எங்கள் பணி தொய்வில்லாமல் தொடரும் என்று கூறினார். முன்னதாக, படிப்பகத் திறப்பு விழாவில் செங் கொடியை ஏற்றி வைத்து மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் பேசுகையில், மீத்தேன் திட்டத்தின் மூலம் தமிழகத்தின் நெற்களஞ்சியம் எனப்படும் தஞ்சை டெல்டா மாவட்டங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் கபளீகரம் செய்ய இருப்பதை எதிர்த்து விவசாயிகள், மக்கள் போராட்டம் நடத்தி  வருகின்றனர். மக்களின் அடிப்படையான வாழ்வா தாரம், கல்வி, சுகாதாரம் காக்க போராட்டங்களைத் தொடர வேண்டும் என்றார். கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன் பேசும்போது, மாநகரின் பல்வேறு கிளைகளில் ஏழை, எளிய மாணவர்களுக்காக இலவச மாலை நேர வகுப்புகள் நடத்தப்படுவதை சுட்டிக்காட்டி ஆட்சியாளர்களின் தேசியக் கல்விக் கொள்கை ஏழை, எளிய மக்களின் கல்வி வாய்ப்பை பறிப்பதை பற்றி எச்சரித்தார். வரக்கூடிய காலத்தில் குழந்தைகள், இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சனைகளில் கூடுதல் கவனம் செலுத்துவோம் என்றார். இவ்விழாவுக்கு வடக்கு மாநகரக்குழு உறுப்பினர் பா.சௌந்தரராசன் தலைமை வகித்தார். படிப்பகக் கட்டிடத்தில் தலைவர்கள் படத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராஜகோபால், என்.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். மாநகரச் செயலாளர் பி.முருகேசன், மாநகரக்குழு உறுப்பினர்கள் பி.ஆர்.கணேசன், ஒய்.அன்பு, இ.வளர்மதி உள்ளிட்டோர் உரை யாற்றினர். இவ்விழாவில் கட்சி அணியினர் திரளானோர் கலந்து கொண்டனர். நிறைவாக கிளை சார்பில் சி.ராஜன் நன்றி தெரிவித்தார்.