கோவை, ஜூன் 20- கோவை மாவட்ட எல்லையில் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து இ-பாஸ் பெற்று வரும் வாகனங்களை சோத னை செய்வது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதைத் தடுக்க சென் னையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ள நிலையில், கோவை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக் கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் மாநில மற்றும் மாவட்ட எல்லைகளிலுள்ள சோதனைச் சாவ டிகளில் வாகன சோதனைகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளது. இ-பாஸ் பெறாத யாரும் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படு வதில்லை. இவ்வாறு இ- பாஸ் பெற்று வருபவர்களுக்கு சோதனைச் சாவடிகளில் சுகாதாரத் துறை அலுவலர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, 14 நாட்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்ப டுத்தப்படுவார்கள்.
இப்படி தனிமைப் படுத்தப்பட்டவர்கள் விதிகளை மீறி வீடு களை விட்டு வெளியேறுவது கண்டறி யப்பட்டால் அவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், மளிகை உள்ளிட்ட கடை உரிமையாளர் ஏற்கனவே அறிவிக்கப்பட் டுள்ள விதிமுறைகளை மீறி கடைகள் செயல்படுவது மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதேபோல், பொது மக்கள் பொது இடங்களுக்கு வரும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந் தும், தனிமனித இடைவெளியை கடை பிடிக்க வேண்டும். கொரோனா பரவலை தடுப்பதற்காக கோவை மாவட்ட காவல் துறையினர் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொது மக்கள் முழு ஒத்துழைப்பு நல்கி பொறுப் புணர்வோடு நடந்து கொள்ளுமாறு கோவை மாவட்ட காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.