tamilnadu

img

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிடுக

சேலம், ஜூலை 18- மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணை யான ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சேலம், தருமபுரி அரசு மருத்துவ மனைகளில் 2 மணி நேரம் பணியை புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு மருத்து வர்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணை யான ஊதியம் வழங்க வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி 13 ஆண்டுகள் பணியாற்றிய அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும்.  பணியிட கலந் தாய்வை உடனடியாக அமல்படுத்த வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு  சார்பில் அரசு மருத்துவர்கள் பல்வேறு போராட்டங் களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி நடை பெற்ற சட்டமன்ற கூட்டத்தில் சுகாதாரத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு குறித்து விவாதிக்காததைக் கண்டித்து வியாழனன்று சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை யில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவை புறக் கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு மருத்துவர் கள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங் கிணைப்பாளர் செந்தில் தலைமையில் ஏராளமான மருத்துவர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

தருமபுரி

தருமபுரி அரசு மருத்துவமனையில், அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் 2 மணிநேரம் புறநோயா ளிகளை புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் மேற் கண்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித் துள்ளது.