தாராபுரம், ஜூலை 28- நான்குவழிச்சாலை பணியின் போது, தாரா புரத்தில் குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் சேதம டைந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், அவினாசிபாளையத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் வரை நான்குவழிச்சாலை பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன. தாரா புரம் அமராவதி ரவுண்டானா பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அமராவதி ரவுண்டானா பகுதியில் சுண்ணாம்பு காடு கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்கள் செல் கிறது. மேலும் பொள்ளாச்சி சாலை சந்திப்பி லிருந்து அமராவதி ரவுண்டானா பகுதியை கழிவு நீர் குழாய் கடந்து செல்கிறது. இந்நிலையில் மேம்பால பணிகளுக் காக ரவுண்டானா பகுதியில் பள்ளம் தோண்டியுள்ளனர். இதனால் குழாய்கள் உடைந்துவிட்டது. அதை சரிசெய்யப் படவில்லை. இதன்காரணமாக குடிநீரும், கழிவு நீரும் வெளியேறி அப்பகுதி முழு வதும் துர்நாற்றம் வீசுகின்றது. இதனால் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் சுண்ணாம்பு காடு கூட்டுக் குடிநீர் திட்டத்தை நம்பி உள்ள கிராமங்களுக்கு செல்லும் குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும், நெடுஞ்சாலைத் துறை நான்குவழிச்சாலை சிறப்பு அதி காரிகளும் குடிநீர் குழாய் உடைப்பையும், கழிவுநீர் குழாய் உடைப்பையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.