tamilnadu

img

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடத்தை நிரப்பிடுக

தருமபுரி, ஜூலை 18- அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என பள்ளி பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது. பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மண்டல கூட்டம் தருமபுரி அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில்  நடை பெற்றது. பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க பொறுப்பாளர் ஜே.கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் எஸ்.கவிதா, மாவட்ட தலைவர் துரைராஜ், தமிழ்நாடு ஆரம் பப்பள்ளி கூட்டணி சேலம் மாவட்ட தலைவர் ரமேஷ், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் வீரமணி, இயற்கையை காப்போம் அமைப்பின் தலைவர் தாமோதரன், தமிழ்நாடு அரசு எஸ்சி/எஸ்டி அலுவலர் நலச்சங்க மாவட்ட தலை வர் ஜெயபூர்ணிமா, ஆசிரியர்கள் கூத்தப்பாடி பழனி, செளந்தரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர். இக்கூட்டத்தில், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளன. இவற்றை பூர்த்தி செய்து மாணவர்களுக்கு கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் குறைவான மாணவர்களின் எண்ணிக்கையை காரணம் காட்டி பள்ளியை மூடும் நடவடிக்கையை அரசு கைவிட்டு பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மேலும், தற்போது எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. எல்கேஜி வகுப்புக்கு ஒரு ஆசிரியர், யுகேஜிக்கு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என  நியமிக்க வேண்டும். இந்த வகுப்பறைகளை மாணவர் களை ஈர்க்கும் வகையில் வண்ணமயமாக்க வேண்டும். கல்வி உபகரணங்கள் வழங்கி பள்ளிக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.