tamilnadu

img

வனவிலங்குகளின் நடமாட்ட பகுதிகளில் கட்டிடங்கள் கட்டாதே குடிசை மாற்று வாரியத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

கோவை, ஜூன் 27–  வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணி களை நிறுத்தக்கோரி வியாழனன்று ஆலாந்துறை அருகே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கோவையை அடுத்த ஆலாந்துறை பகுதியில் உள்ள காளிமங்கலம் பகுதி மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியை ஒட் டிய பகுதியாகும். இங்கு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அவ்வப்போது இருந்து வருகிறது. இந் நிலையில், கிராமத்திற்கு அருகில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டு வரும் 600 வீடுகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடியமர்த்தப்பட உள்ள னர். ஏற்கனவே, யானை நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில் கூடுதலாக ஆயிரக்கணக்கான மக்கள் குடியமர்த்தப் பட்டால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. புதிதாக குடியமர்த்தப்படும் மக்களும் யானை தாக்குதல்களுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வருகின்றனர். ஆனால் குடிசை மாற்று வாரியமோ எவ்வித தடங்கலுமின்றி கட்டு மானத்திற்கான அடிப்படை பணிகளை மேற்கொண்டு வருகிறது.  இந்நிலையில், இந்த கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தக்கோரி காளிமங்கல கிராம மக்கள் ஆலாந்துறை யில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கோவை சிறுவாணி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கு வந்த ஆலாந்துறை காவல்துறையினர் பொது மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும், அதிகாரிகள் வந்து உரிய பதிலளிக்கும் வரை போராட் டத்தை விலக்கிக் கொள்ளப் போவ தில்லை என சாலை மறியலை தொடர்ந்த னர். இதனையடுத்து, துணை வட்டாட்சி யர் நேரில் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுக்கு தெரிவிக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகை யில், “தற்போது கட்டப்படும் இந்த குடி யிருப்புகளால் வனவிலங்குகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும். இதனால், ஊருக்குள் அதிகளவில் வனவிலங்குகள் வந்து மனித-விலங்கு மோதலுக்கு வழிவகுக்கும். யானை வழித்தடம் அழிக்கப்படுவதால் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும். ஏற்கனவே, அதிக அள வில் யானைகள் ஊருக்குள் வந்து கொண்டி ருக்கும் சூழ்நிலையில், அதன் பாதையை மறித்தால் இன்னும் நிறையப் பிரச்சனை கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தெரி வித்தனர்.