tamilnadu

img

இந்திய ஜனநாயக வாலிபர்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்ட பொருளாளர் அசோக், சாதிய ஆதிக்க சக்தியினரால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இவருக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியம் காவேரி ஆர்.எஸ். பேருந்து நிறுத்தம் அருகில் வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநிலத் தலைவர்  ரெஜீஸ்குமார், மாவட்ட தலைவர் இ.கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் வீ.மணிகண்டன், ஒன்றிய செயலாளர் எம்.கே.பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் லெனின், தமிழரசி, நந்தினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.