உடுமலை, செப். 2- உடுமலை திருமூர்த்தி அணைக்கு தொகுப்பு அணைகளி லிருந்து காண்டூர் கால்வாய் மூலம் தண்ணர் கொண்டுவரப்பட்டு சேமித்து திருப்பூர், கோவை மாவட் டங்களில் 3.77லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் 4 மண்டலமாக பிரிக்கப் பட்டு பாசன வசதி பெற்று வருகிள் றன. மூன்றாம் மண்டல பாசனத் திற்கு முழுமையாக தண்ணீர் கொடுக்கப்பட்டு, கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து 94 ஆயிரத்து 68 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், நான் காம் மண்டலத்திற்கு திருமூர்த்தி அணையிலிருந்து வழக்கமாக ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று தண் ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு கோடை மற்றும் தென்மேற்கு பருவ மழை போதிய அளவு மழை பெய்யா ததாலும், தொகுப்பு அணைகளில் போதிய நீர் இல்லாததாலும், அணைக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் தாமதமாகத் தொடங்கிய தென்மேற்கு பருவ மழையால் தொகுப்பு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் திட்ட தொகுப்பு அணையிலிருந்து திரு மூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டுவரும் 49கி.மீ தூரம் உள்ள காண்டூர் கால்வாயில் கனமழை காரணமாக சர்க்கார்பதி துணை மின்நிலையம் அருகில் 1 கி.மீ தூரம் வரை மண்சரிவு ஏற்பட்டது. மண் சரிவால் அப்பகுதியில் உள்ள காண் டூர் கால்வாய் முழுவதும் மூடப்பட் டது. கால்வாயில் விழுந்த மண் மற் றும் பாறைகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் தொகுப்பு அணைகளில் நீர் இருந்தாலும், அதனைத் திரு மூர்த்தி அணைக்குக் கொண்டு வந்து நான்காம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு தாமதமாகிறது. அதேநேரம், பாசனத்திற்கு தண்ணீர் திறப்பை எதிர்பார்த்து, ஒரு மாத மாக தாமதமாகி வருவதால் விவ சாயிகள் கவலையடைந்துள்ளனர். கடந்த ஆண்டு இதே நாளில் 60 அடிகொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 56.57அடி யாக இருந்த நிலையில், தற்போது திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 15.65 அடி மட்டுமே உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 கன அடியாகவும், குடிநீருக்காக வெளியேற்றப்படும் நீரின் அளவு 23 கன அடியாகவும் உள்ளது.