tamilnadu

img

கலப்பட டீத்தூள் பறிமுதல்

அவிநாசி, செப். 17- அவிநாசி பேரூராட்சி பகுதியில் செவ்வாயன்று கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது. அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட தாமஸ்புரம் பகுதியில் கலப்பட தேயிலை துாள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு புகார் வந்தது. இதன்பேரில், திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாலமுருகன், சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய குழு வினர் அப்பகுதியில் சோதனையிட்டனர்.  இதில் சுப்ரமணி என்பவர் வீட்டில் எஸ்விஸ் டீ கம்பெனி, கோயமுத்துார் என்ற நிறுவனத்தின் பெய ரில் மஞ்சு டீ, சாகர் பிரிமியம் டீ, நியூ குயின் அசாம் டீ  என்ற பிராண்ட் பெயரில் பொட்டலத்தில் அடைக் கப்பட்ட தேயிலைத்துாள் விற்பனைக்காக வைக் கப்பட்டிருந்தது. இவையனைத்தும் போலி என்பது, ஆய்வில் தெரியவந்தது.  இதுதொடர்பாக, தேயிலை துாள் ஆய்வுக்கூட பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன்  அறிக்கை வந்த பிறகு மேற்கொண்டு நடவடிக்கை  எடுக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்பு துறை  நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தெரி வித்தார்.