தருமபுரி, அக்.12- அரூர் வருவாய் கோட்டத்தில் புதிய சார் ஆட்சிய ராக மு.பிரதாப் பொறுப்பேற்றுக் கொண்டார். தருமபுரி மாவட்டம், அரூர் வருவாய் கோட் டத்தின் புதிய சார் ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள மு.பிரதாப் (25), 2017ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்ச்சிப் பெற்றார். பிறகு, திருவண்ணாமலை மாவட்டத்தில் உதவி ஆட்சியராக (பயிற்சி) பணி புரிந்தார். தொடர்ந்து, புதுதில்லியில் மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் உதவிச் செயல ராக பணிபுரிந்தார். தற்போது அரூர் வருவாய் கோட்டத்தின் புதிய சார் ஆட்சியராக பொறுப் பேற்றுள்ளார். ஏற்கனவே அரூரில் வருவாய் கோட்டாட்சிய ாக பணிபுரிந்த ஜி.புண்ணியக்கோட்டி, தமிழ்நாடு உணவு பொருள் பாதுகாப்பு கழகத்தின் மண்டல மேலாளராக சென்னைக்கு பணி மாறுதல் செய் யப்பட்டுள்ளார்.