திருப்பூர், பிப். 21- மணிப்பூர் மாநிலம் இம்ப்பாலில் 41 வது அகில இந்திய மூத்தோர் தடகளப்போட்டி பிப்.9 முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள தமிழ்நாடு மூத்தோர் தடகளச் சங்கத்தின் மூலம் திருப்பூர் மாவட்டத்திலிருந்து ஆண்கள் 6 நபர்கள், பெண்கள் 3 நபர்கள் என 9 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். போட்டி நடைபெறும் இடம் மிகத் தொலைவில் இருப்பதாலும், பொருள் வசதி இன்மையாலும், 35 வயதுப் பிரிவில் 3 ஆண்கள் மட்டும் தமது சொந்தச் செலவில் கலந்து கொண்டனர். அதில் திருப்பூர், வெல் நிட் பனியின் கம்பெனியில் புணிபுரியும் ஏ.அந்தோணிசாமி 800 மீட்டர் ஓட்டத்தில், முதலிடம் பெற்று தங்கமும், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இரண்டாமிடமும் பெற்று வெள்ளியும், 1500 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாம் இடமும் பெற்று வெண்கல பதக்கமும், ஏ.முருகப்பெருமாள் என்பவர் நீளம் தாண்டுதலில் முதலிடமும், சுரேஷ் குமார் 5 கி.மீட்டர் நடை போட்டியில் மூன்றாம் இடம் பெற்று வெண்கல பதக்கமும் என அகில இந்திய அளவில் மொத்தம் 5 பதக்கங்களை பெற்றுள்ள னர். திருப்பூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த வெற்றியாளர்க ளுக்கு மாவட்ட ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன் பாராட்டுக்களை தெரிவித்தார்.