tamilnadu

img

ஆன்லைன் வர்த்தகம் காரணமாக 30 விழுக்காடு விற்பனை வீழ்ச்சி - வணிகர் சங்கம் குற்றச்சாட்டு

கோவை, டிச. 17-  ஆன்லைன் வர்த்தகம் காரணமாக தற்போது 30 விழுக்காடுகளாக வீழ்ந்து உள்ள சில்லறை வணிகம், விரைவில் 50 விழுக்காடுகளாக உயரும் அபா யம் உள்ளதாக கோவையில் வணிகர் சங்க மண்டல தலைவர் சந்திரசேகரன் தெரிவித்தார். கோவை மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆன்லைன் வர்த்தகத்தை கண் டித்து செவ்வாயன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. மண்டல தலைவர் சூலூர் சந்திர சேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலை வர் இருதயராஜா முன்னிலை வகித் தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு ஆன்லைன் வர்த்தகத்தை தடை  செய்ய வேண்டும் என்பதை வலியு றுத்தி கண்டன முழக்கங்கள் எழுப் பப்பட்டது. இதில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வணிகர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக, வணிகர் சங்க மண் டல தலைவர் சந்திரசேகரன் செய்தி யாளர்களிடம் கூறுகையில், ஆன் லைன் வர்த்தகம் காரணமாக இந்திய அளவில் ஒட்டு மொத்த வணிகமும் பாதிக்கப்பட்டு வியாபாரம் சீர் குலைந்து வருகிறது. ஆன்லைன் வர்த்தகத்தால் தற்போது 30 விழுக் காடு சிறு வணிகம் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், இது 50 விழுக்காடு களாக உயரும் என்றார். 

மேலும், பிளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் நிறுவனம் இந் திய துணைக் கண்டத்தில் அனுமதி பெற்று இயங்கி வரும் நிலையில், தாங்கள் நஷ்டத்தில் வியாபாரம் செய்து வருவதாகவும், சில்லறை வணிகத்தை முடக்கும் நோக்கில் இந்திய பொருளாதாரத்தை சீரழித்து அனைத்து வணிகத்தையும் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடு பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும், பெப்சி, கொக்கோ கோலா குளிர்பானங்கள் எப்படி சுதேசி  குளிர்பான விற்பனையை அழித் ததோ, அதே நோக்கில் சில்லறை வணி கத்தை தள்ள முயற்சி செய்வதாக குற்றம் சாட்டிய அவர், வேலை வாய்ப் புகள் தரும் சில்லறை வணிகமும், விவ சாயமும் அழிகின்ற நிலைக்கு தற் போது தள்ளப்பட்டு இருப்பதாகவும் இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.