tamilnadu

img

குடியுரிமைச் சட்டமா? குடிகெடுக்கும் திட்டமா? - மதுக்கூர் இராமலிங்கம்

ஆர்எஸ்எஸ் அமைப்பின் சர் சங் சாலக் பொறுப்பிலிருந்த ஹெட்கே வார் மறைவிற்குப் பிறகு அந்த அமைப்பின் சர் சங் சாலக்காக பொறுப்பேற்ற எம்.எஸ். கோல்வார்க்கர் பேசுகிறார். ‘இனம், பண்பாடு ஆகியவற்றின் தூய்மை யை காப்பாற்றுவதற்காக ஜெர்மனி உலகத்திற்கு அதிர்ச்சி தரக் கூடிய காரியத்தைச் செய்துள்ளது. அதாவது தன் நாட்டின் யூதர்களை களை யெடுத்துள்ளது. அடி வேரிலேயே வேற்றுமை கள் கொண்ட இனங்களையும் பண்பாடுக ளையும் ஓர் ஒன்றுபட்ட ஒருமைக்குள் உட்கிர கித்துக் கொள்வது முற்றிலும் சாத்தியமற்றது என்பதையும் ஜெர்மனி காட்டியுள்ளது. இந்துஸ்தானத்தில் உள்ள நாம் இந்தப் படிப்பி னையிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். 

இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் என்ன செய்ய வேண்டும் என்று கோல்வார்க்கர் கூறுவதைக் கேளுங்கள் ‘அவர்களுக்கு இரண்டேஇரண்டு மார்க்கங்கள் தான் உள்ளன. ஒன்று, அவர்கள் தேசிய மரபி னத்துடன் ஒன்றிணைந்து அதன் பண்பாட்டை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது இந்த தேசிய மரபினம் எத்தனை காலம் அனுமதிக் கிறதோ, அத்தனைக் காலம் அவர்கள் இங்கு வாழ்ந்து விட்டு பிறகு, இத்தேசிய இனத்தின் சித்தத்தின் படி நாட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும். சிறுபான்மையினர் பிரச்சனைப் பற்றிய ஆரோக்கியமான பார்வை இது ஒன்றுதான்’. கோல்வார்க்கர் மேலும் கூறுகிறார், ‘இந்துக் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ளாத யாரும் இந்தியாவில் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுவார்கள். அவர்களுக்கு எவ்வித சலுகையோ, உரிமைகளோ கிடைக்காது என்ப தோடு நாட்டின் குடிமக்களுக்கான உரிமை கூட மறுக்கப்படும்.’

இங்கு கோல்வார்க்கர் தேசிய இனம் என்று வாயாடுவது சனாதனத்தின் அடிப்படையிலான பிராமணிய மேலாதிக்கம் கொண்ட இந்துத்து வாதான். மதச்சார்பற்ற அரசியல் சாசன நெறி களை கிழித்து எறிந்து விட்டு கோல்வார்க்கர் சொன்ன குடியுரிமைப் பறிப்பு கோட்பாட்டை ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலுடன் செயல்படும் மத்திய பாஜக கூட்டணி அரசு செயல்படுத்தத் துவங்கியிருக்கிறது. அதன் முதல் படிதான் குடியுரிமை திருத்த சட்ட முன்வடிவை நிறை வேற்றி இருப்பதாகும். 1920 களில் ஜெர்மனியில் கம்யூனிஸ்டுகள் மக்கள் செல்வாக்குடன் இருந்தார்கள். இவர்க ளை கொள்கை ரீதியாக எதிர்கொள்ள திராணி யில்லாத ஹிட்லர் குறுகிய தேசிய இனவெறியை தூண்டிவிட்டார். அனைத்து கொள்கை அறிக்கையிலும் யூதர்களுக்கு எதிரான வெறிப் பிரச்சாரம் தீவிரமாக முன்வைக்கப்பட்டது. ஹிட்லரின் நாஜி கட்சி, ஜெர்மானியர்கள் தூய ஆரிய இனத்தின் வாரிசுகள் எனப் பிரச்சாரம் செய்தது. நாஜிக் கட்சியின் மூல வேர் என்பது ‘துலே சமூகம்’ எனும் ரகசிய அமைப்பாகும். துலே எனும் பிராந்தியத்தின் புனையப்பட்ட ‘ஹைபர்போரியா’ என்ற தலைநகரில் வாழ்ந்த ஆரிய இனத்தை சேர்ந்தவர்களின் வாரிசுகள் என நாஜிக்கள் கூறத் துவங்கினர். அதாவது,  ஆர்எஸ்எஸ் என்கிற அமைப்பினால் பாஜக உருவாக்கப்பட்டது போலவே, துலே என்கிற அமைப்பினால் வளர்க்கப்பட்டவர்தான் ஹிட்லர்.

தற்போது இஸ்லாமியர்களுக்கும், தலித் துக்களுக்கும் எதிராக இந்தியாவில் பரப்பப்படும் வெறித்தனமான பிரச்சாரம் ஆர்எஸ்எஸ், நாஜிக்களிடமிருந்து கற்றுக் கொண்டதுதான். யூதர்களின் மதச்சடங்கு அடிப்படையில், விலங்குகள் பலியிடும் சடங்குக்கு தடை விதிக்கப் பட்டது. ஜெர்மானிய, யூத ரத்தக்கலப்புக்கு தடை விதிக்கப்பட்டது. கல்வி நிலையங்களில் யூதர்களுக்கு எதிரான இனவாத அடிப்படை பாடத்திட்டம் புகுத்தப்பட்டது. இதன் உச்சக்கட்டமாக, 1933 ஆம் ஆண்டு குடியுரிமை மற்றும் இயற்கைமயமாக்கல் சட்டம் ஹிட்லரால் ஜெர்மனியில் கொண்டு வரப்பட்டது. யூதர்களை ஜெர்மனிய சமூகத்திலிருந்து தகுதி நீக்கம் செய்யும் சட்டம் கொண்டு வரப்பட்டு, ஒரே நேரத்தில் ஒன்றரை லட்சம் யூதர்களின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டது. 

1935 இல் யூதர்களை முற்றிலுமாக அழித்தொழிக்க ‘நூரம்பர்க் சட்டங்கள்’ கொண்டு வரப்பட்டன. ஜெர்மன் ரத்தம் உடை யவர்கள் மட்டுமே குடிமக்கள் என்று கூறி, சொந்த நாட்டிலேயே யூதர்கள் அந்நியர்கள் என்று அழைக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் உலகப் போரின்போது வதை முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு, 60 லட்சம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.  தற்போது, இந்தியாவில் இஸ்லாமியர்க ளுக்கு எதிராக இதேபோன்ற நடைமுறைதான் துவங்கியுள்ளது. குடியுரிமைச் சட்டத்தின் முன்னோட்டமாக அசாமில் தற்போதே 19,06,657 பேர் நாடற்றவர்களாக அறிவிக்கப் பட்டுள்ளனர். இவர்கள் தங்குவதற்கு என்று முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் அந்நியர்கள் என்று அறிவிக்கப்பட்டு விட்டனர். குடியுரிமைச் சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வரும்போது இந்தியாவில் பல லட்சம் பேர் நாடற்றவர்களாக அறிவிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள். இவர்களின் குடியுரிமை மட்டுமல்ல, வாக்குரிமை உட்பட அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டு, முகாம்களில் முடக்கப்படுவார்கள். இவர்களை எந்த நாட்டுக்கும் திருப்பி அனுப்புவதும் சாத்தியமல்ல. 

முன்னாள் குடியரசுத்தலைவராக இருந்த பக்ருதீன் அலி அகமதுவின் வாரிசுகளே தற்போது குடியுரிமை அற்றவர்களாக அறி விக்கப்பட்டு விட்டார்கள் என்றால், சாதாரண முஸ்லிம்களின் நிலை என்ன என்பது நடுங்க வைக்கும் ஒன்றாகும். அசாமில் கொண்டு வரப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டை இந்தியா முழுவதும் கொண்டு வருவோம் என்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. அதன்பிறகு என்ன நடக்கும்? இந்தியாவில் உள்ள அனைத் துக் குடிமக்களும் பாஜக ஆட்சி நிர்ணயிக்கும் தேதிக்கு முன்பு இந்தியாவில் பிறந்ததற்கான ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும்.  அவர்கள் குறிப்பிடும் தேதிக்கு முன்னால் அவரவர் முன்னோர்களின் பிறப்புச் சான்றிதழ், வீடு, நிலம் மற்றும் குத்தகைப் பத்திரங்கள், கல்வி நிலையச் சான்றிதழ்கள், வங்கி, அஞ்சல், எல்ஐசி மற்றும் திருமணச் சான்றிதழ், வாக்கா ளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை என ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என்பார்கள். இந்தியாவில், தற்போது கோடிக்க ணக்கான உழைக்கும் மக்களுக்கு அடிப்படை ஆவணங்கள் எதுவும் இல்லை. 

இந்த ஆவணங்களைப் பெற ஒவ்வொரு வரும் அரசு அலுவலகங்களுக்கு படையெடுக்க வேண்டியிருக்கும். பிழைப்பை இழந்து விட்டு அலுவலகங்களுக்கு அலைக்கழிக்கப்படு வார்கள்.  தேசிய குடிமக்கள் பதிவேட்டை தயாரிக்க 5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், இது ஒரு மிகப்பெரிய செலவு பிடிக்கும் செயலாக அமையும்.  தற்போது செய்யப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தின்படி இஸ்லாமியர்கள் தவிர மற்ற மதத்தினர் 6 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்தி ருந்தாலே குடியுரிமை பெற்றுவிடுவார்கள். கோடிக்கணக்கான இஸ்லாமியர்களின் குடி யுரிமை பறிக்கப்படும்.  இதனால், பெரும் கொந்த ளிப்பு ஏற்படும். 

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் காரணமாக, வாழ வழியின்றி, இந்தியாவில் இலங்கை தமிழர்கள் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். 1983லிருந்து 2010 வரை 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 110 முகாம்களில் 65 ஆயிரம் பேரும் முகாம்களுக்கு வெளியே சுமார் 35 ஆயிரம் பேரும் வசித்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கான அகதி முகாம்கள், ஒரு வகையில் வதை முகாம்க ளாகவே உள்ளன. இவர்களுக்கு எந்த உரிமை யும் இல்லை. தமிழகம் உட்பட இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.  ஆனால், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து குடியேறிய இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள், சீக்கியர்கள் ஆகியோருக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும் என்று கூறப்பட் டுள்ளது. இலங்கையிலிருந்து இந்தியாவில் குடியேறிய தமிழர்கள் குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை. இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மோடி அரசு வன்மத்துடன் மறுத்து வருகிறது.

30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா வில் இருந்தும் கூட தமிழர்கள் என்கிற ஒரே கார ணத்திற்காக அவர்களின் குடியுரிமை மறுக்கப்படுகிறது. அவர்களில் பெரும்பாலோர் இந்துக்கள். ஆனாலும், மூன்று நாடுகளில் இருந்து குடியேறிய இந்துக்களுக்கு குடியுரிமை வழங்குவோம் என்பவர்கள் இவர்களுக்கு குடி யுரிமை வழங்க மறுக்கிறார்கள். இந்தியாவி லேயே பிறந்து இந்தியக் கலாச்சாரத்தோடு ஒன்றி வாழ்ந்தும் கூட இந்த திருத்த மசோதா அவர்களுக்கான அடையாளத்தை, அங்கீ காரத்தை வழங்க மறுக்கிறது. 

நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற துணை நின்றதன்  மூலம் அதிமுக ஒரு வரலாற்று துரோகத்தை இழைத்துள்ளது. இந்த கட்சியை துவக்கிய எம்ஜிஆரின் குடும்பம், இலங்கை கண்டியி லிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த ஒன்றா கும். இந்த சட்டத்தின்படி, எம்ஜிஆர் இருந்தி ருந்தால் கூட  இந்திய குடியுரிமையை இழந்தி ருப்பார். ஆனாலும், அவரால் துவக்கப்பட்ட கட்சியை சேர்ந்தவர்கள், இந்த துரோக மசோதாவிற்கு வாக்களித்துள்ளனர். மக்களவையில் பாஜகவிற்கு உள்ள மிருகப் பெரும்பான்மை மூலம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய நிலையில் மாநிலங்களவையில் அதிமுக எதிராக வாக்களித்திருந்தால், இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டிருக்கும். அதிமுக வைச் சேர்ந்த 19 மாநிலங்களவை உறுப்பி னர்கள் வாக்களித்ததால்தான் இந்த மசோதா சட்டமாகியுள்ளது. இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால், அதை காதில் வாங்க பாஜக மறுத்துவிட்டது. 

மண்டைக்காடு கலவரத்திற்குப் பிறகு, இந்து முன்னணி நடத்திய பேரணியை கண்டித்து பேசிய எம்ஜிஆர் (29.03.1982) ‘மதவாதிகளின் கொள்கை எதுவாக இருந்தாலும், மக்களை ஒற்றுமைப்படுத்துவதாக இருக்க வேண்டும், மதவாதிகள் மக்களைப் பிரிக்க நினைப்பதை இந்த அரசு அனுமதிக்காது’ என்று திட்டவட்ட மாக கூறினார். இந்தக் கலவரத்திற்கு பிறகு புதுதில்லி தமிழ்நாடு மாளிகையில் தன்னை சந்திக்க வந்த ஆர்எஸ்எஸ்காரர்கள் மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டார்கள். இந்த இயக்கம் நாட்டுக்கும் தமிழ்நாட்டுப் பண்புக்கும் ஒத்து வராது என்று பத்திரிகையாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டார் எம்ஜிஆர் (17.02.1983). ஆனால், மதத்தின் பெயரால் மக்களையும் தேசத்தையும் துண்டாட முயலும் ஆர்எஸ்எஸ்-ன் வாரிசான பாஜகவின் பாதார விந்தங்களில் பணிந்து விழுந்து அவர்கள் கொண்டு வரும் அத்தனை சட்டத்தையும் கேள்வியின்றி ஏற்றுக் கொள்ளும் கட்சியாக இன்றைக்கு அதிமுக மாறியுள்ளது. 

நீட் தேர்வு, உதய் மின் திட்டம், ஜிஎஸ்டி வரி என மோடி அரசின் திட்டங்களை முதல்வராக இருந்த ஜெயலலிதா எதிர்த்தார். நீட் தேர்வை தமிழகத்தில் அனுமதிக்க மறுத்தார். ஆனால், ‘அம்மாவின் ஆட்சி’ என்று கூறிக் கொண்டே  ஜெயலலிதா எதிர்த்த அத்தனை திட்டங்களை யும் ஆதரித்து கை தூக்குகிறது இன்றைய அதிமுக.

சமூக நீதி, இலங்கை தமிழர் நலன் குறித் தெல்லாம் வாய் கிழியப் பேசிய பாமகவும், இந்த சட்டத்தை ஆதரித்துள்ளது. இதுகுறித்து கேட்டால், பாமக தலைவர் ராமதாஸ் கூட்டணி தர்மத்திற்காக ஆதரித்தோம் என்கிறார்.  இந்த சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்த அசாம் கணபரிஷத், ஐக்கிய ஜனதா தளம், அகாலி தளம் போன்ற கட்சிகள் தற்போது எதிர்ப்பு தெரிவிக்க துவங்கியுள்ளன. கேரளம், பாண்டிச்சேரி, மேற்குவங்கம், பஞ்சாப், மகாராஷ்டிரா, சிக்கிம் போன்ற மாநில அரசுகள் இந்த சட்டத் திருத்தத்தை தங்கள் மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ள நிலையில், குறைந்தபட்சம் இப்போதாவது, அதிமுக தன்னுடைய நிலையை மறுபரிசீலனை செய்து தமிழகத்தில் நடை முறைப்படுத்த மாட்டோம் என்று அறிவிக்க வேண்டும். அப்போதுதான் இங்குள்ள இலங்கை தமிழர்களுக்கு நியாயம் வழங்கி யதாக அமையும். இலங்கை தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்காக நீண்ட நெடிய போராட்ட வரலாறு படைத்த தமிழகம், அதிமுக வின் துரோகத்தை ஒருபோதும் ஏற்காது.

இந்தியா முழுவதும் வெடித்துக் கிளம்பி வரும் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது. மதச்சார்பற்ற அரசியல் சாசனத்தை அடிப்படையாக கொண்ட நம்மு டைய திருநாட்டை மதத்தின் பெயரால் துண்டாட முயல்வதை எதிர்த்து நடைபெறும் இந்தப் போராட்டம் ஹிட்லரின் பாசிசத்திற்கு எதிராக நடைபெற்ற போரின் தொடர்ச்சியாகும்.