tamilnadu

img

நெதர்லாந்துக்கு 40 ஆயிரம் செவிலியர்கள் தேவை கேரளத்திலிருந்து அனுப்ப பினராயி விஜயன் உறுதி

புதுதில்லி, ஆக.1- நெதர்லாந்து நாட்டுக்கு தேவைப்படும் செவிலியர் கள் கேரளத்திலிருந்து அனுப்பி வைக்கப்படுவார் கள் என்று அந்நாட்டு தூதர் மார்ட்டின் வான் டென் பெர்க்கை புதுதில்லியில் சந்தித்த கேரள முதல்வர் பின ராயி விஜயன் உறுதியளித் தார். அந்நாட்டில் பெரும ளவில் செவிலியர் பற்றாக் குறை உள்ளதாகவும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் செவிலியர்களுக்கான தேவை உடனடியாக உள்ள தாகவும் கூறியதைத் தொடர்ந்து முதல்வர் இந்த வாக்குறுதி அளித்தார்.  புதுதில்லி கேரள ஹவு ஸில் கேரள முதல்வர் பின ராயி விஜயனை புதனன்று நெதர்லாந்து தூதர் மார்ட்டின் வான் டென் பெர்க் சந்தித்தார். அப்போது அந்நாட்டின் செவி லியர் தேவை குறித்து பேசிய வர் கேரள செவிலியர்களின் அர்ப்பணிப்பும் தொழில் திற னும் மதிக்கத்தக்கது என்று  மார்ட்டின் கூறினார். கேரள செவிலியர்களை அந்நாட்டு க்கு அனுப்புவது குறித்து தொடர் நடவடிக்கைக ளுக்கான பொறுப்பை குடி யேற்ற ஆணையரிடம் (ரெசி டன்ட் கமிஷனர்) முதல்வர் ஒப்படைத்தார்.

கேரள பெருவெள்ள புன ரமைப்பு பணிகள் மற்றும் துறைமுக வளர்ச்சி குறித்தும் இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நெதர்லாந்து ராஜாவும் ராணியும் அக்டோ பர் 17,18 தேதிகளில் கொச்சி க்கு வர உள்ளதாகவும் தூதர் மார்ட்டின் கூறினார். டச்சு கம் பெனி நிர்வாகிகள், தொழில் முனைவோர், தொழில் நுட்ப வல்லுநர்கள் கொண்ட 15 முதல் 20 பேர் கொண்ட பிரதி நிதிகள் குழுவினர் அவர்க ளோடு வர உள்ளனர். சுமார் 40 பேர் கொண்ட நிதிக் குழு வும் இந்த பயணக்குழுவில் இடம் பெற உள்ளது. கொச்சி மாவட்ட ஆட்சியர் எஸ்.சுகாஸ் இதுதொடர்பாக குடியேற்ற ஆணையரை தொடர்பு கொண்டு தேவையான ஏற்பா டுகளை செய்ய உள்ளார்.  பினராயி விஜயன் அண் மையில் நெதர்லாந்து சென்ற போது அந்நாட்டின் ஒத்துழை ப்புடன் துறைமுக வளர்ச்சி மற்றும் கேரளத்தில் டச் காப்பகங்களின் வளர்ச்சி தொடர்பான திட்டங்களை செயல்படுத்துவது குறித்து விவாதம் நடந்தது. அதன் தொடர்ச்சியாகவே இந்த புதிய வாய்ப்புகள் வந்துள்ளன. இது குறித்த தொடர் நடவடிக்கை கள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார். 

நெதர்லாந்துக்கு காய்கறி, பூக்கள் ஏற்றுமதி செய்யும் முக்கிய மையமாக கேர ளத்தை மாற்றவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. கேர ளத்துடனான வணிகத் தொ டர்புக்கு டச் கம்பெனிகள் அதிக ஆர்வம் கொண்டுள்ளன. இந்தியாவுடனான டச் தொடர்பு கேரளத்திலிருந்து தொடங்க உள்ளது. ஹோ ரித்துஸ் மலபாரிக்கஸ் ஆங்கில பதிப்பை கேரள பல்கலைக்கழகம் வெளியிட்டுள் ளது. அதன் சிறப்பு பதிப்பு தயாராகி வருகிறது. புத்த கத்தின் நகல் நெதர்லாந்து ஆட்சியாளர்களுக்கு அனு ப்பி வைக்கப்பட்டுள்ளன. கேரளத்துடன் நெதர்லாந் துக்கு உள்ள நீண்டகால உற வின் பிரதிபலிப்பே ஹோரித் துஸ் மலபாரிக்கஸ் என்று  தூதர் மார்ட்டின் தெரிவித் தார். நெதர்லாந்து தூதரக நிதித்துறை அதிகாரி ஜுஸ்ட் கெய்ஜர், முதல்வரின் ஆலோ சகர் ஜாண் பிரிட்டாஸ் ஆகி யோர் உடனிருந்தனர்.