tamilnadu

img

வாலிபர் சங்கம் போராட்டம்: கோரிக்கைகளை நிறைவேற்ற வாக்குறுதி...

உளுந்தூர்பேட்டை. டிச, 6- கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றியத்தைச் சேர்ந்த கொரட்டங்குறிச்சி கிரா மத்தில் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்க்கக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டம் அதிகாரிகளின் பேச்சுவார்த்தை யில் உடன்பாடு ஏற்பட்டதால் ஒத்தி வைக்கப்பட்டது. கொரட்டங்குறிச்சி கிராமத்தில் மயான  ஆக்கிரமிப்புகளை அகற்றி சிமெண்ட்  சாலையும், எரிமேடையும் அமைக்க வேண்  டும், பேருந்து நிறுத்தத்தில் மின்விளக்கு அமைக்க வேண்டும், அனைத்து தெருக்களி லும் சிமெண்ட் சாலை அமைத்து கால்வாயை  தூர்வாரி செப்பனிட்டு, சிறு பாலங்கள் அமைத்து தரவேண்டும். பள்ளிக்கூடம் செல்வதற்கு சாலை அமைத்து வேகத்தடை அமைக்க வேண்டும்,  விளையாட்டுத் திடல் ஏற்படுத்தவேண்டும், குடிநீர் பிரச்சனையை முழுமையாக போக்கி மினி டேங்குகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி இப்போராட்டம் நடை பெற்றது. டிசம்பர் 5ஆம் தேதி கொரட்டங்குறிச்சி யில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு கிளைத் தலைவர் வி.ஆனந்தபாபு தலைமை  தாங்கினார். துணைச் செயலாளர் பாண்டி யன், பொருளாளர் ஜி.சிவராஜ், நிர்வாகி எஸ். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாவட்ட துணைச் செய லாளர் மு.சிவக்குமார், ஒன்றியச் செயலாளர்  ஏ.தங்கமணி, நிர்வாகி எம்.சந்துரு ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.  சிபிஎம் திருநாவலூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் டி.எஸ்.மோகன் வாழ்த்திப் பேசி னார். ஊராட்சி ஒன்றிய துணை ஆணையர்  மற்றும் காவல்துறை உள்ளிட்ட துறைகளின்  அதிகாரிகள் போராட்டம் நடைபெற்ற இடத் திற்கே வந்து கோரிக்கைகளை குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்றித் தருவதாக உறுதி மொழி அளித்ததால் போராட்டம் தற்காலிக மாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.