சிதம்பரம் அருகே ரேசன் கடையில் புழுத்துப்போன அரிசி விநியோகம் !
சிதம்பரம், ஜூன் 16 - சிதம்பரம் அருகே தில்லைவிடங்கன் நியாய விலைக் கடையில் பூச்சி கள் மேயும் புழுத்துப் போன துர்நாற்றம் வீசும் அரிசி வழங்குவதை கண்டி த்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. தில்லைவிடங்கன் ஊராட்சிக்குட்பட்ட 500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு அதே பகுதியில் நியாயவிலை கடை செயல்பட்டு வரு கிறது. இந்தக் கடை முழு நேர கடையாக உள்ள நிலையில் வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே பொது மக்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. இதில் பல மாதங்களாக கோதுமை, மண்ணெண்ணெய் வழங்கு வதில்லை. அதேநேரத்தில் புழுத்துப்போன பூச்சிகள் மேயும் துர் நாற்றம் அடிக்கும் அரிசி வழங்குவதால் அப்பகுதி யில் உள்ள பொதுமக்கள் அரிசியை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள னர். மேலும் இந்த ரேஷன் கடை கட்டிடம் சரியான பராமரிப்பு இல்லாததால் தரைதளம் வீணாகி உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும், கடைக்கு தனி விற்பனையாளரை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியம் சார்பில் நியாய விலைக் கடையை முற்று கையிட்டு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் வைத்தியலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழ. வாஞ்சிநாதன், ஒன்றிய செயலாளர் ஆழ்வார், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சுனில், வந்தா ராஜா, ஞான பிரகாசம், பகத்சிங், காசி நாதன் உள்ளிட்ட ஏராள மான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.