சென்னை, ஆக. 10 - மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச கூலியை வழங்க கோரி திங்களன்று (ஆக.10) சிந்தாதிரிப்பேட்டை யில் உள்ள சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தலைமை அலு வலகம் முன்பு தினக்கூலி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்தபடி தினக்கூலியாக 392 ரூபாய் வழங்க வேண்டும், நீதிமன்ற உத்தரவு மற்றும் முத்தரப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும், கொரோனா தொற்றல் உயிரிழந்த தொழி லாளர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தொழிலா ளர்கள் சங்கத்தின் தலைவர் க.பீம்ராவ் தலை மையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சுமார் 300 தொழிலாளர்கள் கலந்து கொண்ட னர். இதனைத் தொடர்ந்து வாரிய அதிகாரி கள், சங்கத் தலைவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் க.பீம்ராவ் கூறியதாவது: 2018ம் ஆண்டு மே மாதம் முத்தரப்பு பேச்சு வார்த்தையில் ஒப்புக் கொண்ட அம்சங்களை தினக்கூலி, கான்ட்ராக்ட் தொழிலாளர்க ளுக்கு நிறைவேற்ற அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த 392 ரூபாய் கூலியை அடுத்த வாரம் முதல் வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். 108வது வட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த தினக்கூலி தொழி லாளி கணேசன் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணமும், குடும்பத்தில் ஒரு வருக்கும் வேலை வழங்குவது குறித்தும், 480 நாட்கள் பணி முடித்த தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தினோம். அதனை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர். அதிகாரிகள் முதல் அனைத்து நிலைகளி லும் உள்ள தொழிலாளர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வற்புறுத்தி னோம். இவை அனைத்தையும் செய்வதாக அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். ஒரு வாரத்திற்குள் அமல்படுத்த மறுத்ததால், குடும்பத்தோடு தலைமை செயலகம் முன்பு போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார். இந்தப் போராட்டத்தில் சிஐடியு தென் சென்னை மாவட்டச் செயலாளர் பா.பால கிருஷ்ணன், சங்கத்தின் பொதுச் செயலா ளர் எம்.பழனி, பொருளாளர் ஞானபிரகாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.