ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகள் தடுத்து நிறுத்தம்
திருவண்ணாமலை,செப்.2- திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரசாயனம் கலந்து தயாரிக்கப்பட்ட, 200 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை கள் அமைக்கும் பணியை, திருவண்ணாமலை வட்டாட்சி யர் தடுத்து நிறுத்தினார். விநாயகர் சதுர்த்தி தினத்தின் போது, பிளாஸ்டர் ஆப்- பாரிஸ், ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை தயாரிக்கவோ, விற்கவோ அல்லது வாங்கி பிரதிஷ்டை செய்யவோ கூடாது. இவ்வாறு செய்த விநாயகர் சிலை களை நீர்நிலைகளில் கரைக்க, கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டாது என, மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்தது. இந்நிலையில், திருவண்ணாமலை வட்டாட்சியருக்கு, பிளாஸ்டர் ஆப்-பாரிஸ் கொண்டு செய்த விநாயகர் சிலை கள், ஆங்காங்கே வைக்கப்படுவதாக புகார் வந்தது. இதை யடுத்து அவர், திருவண்ணாமலை மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் ஆய்வு நடத்தினார். அப்போது, தடை செய்த பொருட்களால் செய்யப்பட்ட, 200க்கும் மேற்பட்ட சிலைகள் அமைக்கப்படுவதை கண்டறிந்தார். அவற்றை பயன்படுத்தக் கூடாது என எச்சரித்து, வேறு சிலைகளை வைக்க அறிவுறுத்தி னார். மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சம்மந்தப்பட்டவர்களை எச்சரிக்கை செய்து ரசாயனம் பூசப்பட்ட சிலைகள் அமைப்பதை தடுத்து நிறுத்தினார்.
பெண் கொலை: தந்தை கைது
கடலூர், செப்.2- கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகிலுள்ள வீர முடையான் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி மனைவி ரேவதி (33). ஞாயிற்றுக்கிழமை மாலையில் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனையடுத்து, அவரது சட லத்தை அடக்கம் செய்ய இருந்த நிலையில் காவல்துறை யினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்கு உட்படுத்தினர். தொடர் விசாரணையில், வீட்டில் ஏற்பட்ட வாய்த் தகராறில் ரேவதியின் தந்தை கண்ணன் தாக்கியதாகத் கூறப்படுகிறது இதில், அவர் இறந்து விட்ட தாகவும் ஆனால், திடீரென ரேவதி இறந்ததாகக் கூறி இறுதி சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டதும் தெரிய வந்தது. இதனை யடுத்து, வழக்குப் பதிவு செய்த சேத்தியாத்தோப்பு காவல் துறையினர் கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆர்வத்தின் அடிப்படையில் பாடப்பிரிவை தேர்வு செய்ய யோசனை
வேலூர். செப் 2- விருப்பம், ஆர்வத்தின் அடிப்படையிலேயே பாடப்பிரிவு களைத் தேர்வு செய்து படிக்க வேண்டும் என்று விஐடி நிர்வாக இயக்குநர் சந்தியா பெண்ட்ட ரெட்டி தெரிவித்தார். வேலூர் சிருஷ்டி பள்ளியில் மெட்ரிக்., சிபிஎஸ்இ., மாண வர்களுக்கு ‘இன்ஸ்பையர் மீ' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட விஐடி நிர்வாக இயக்குநர் சந்தியா பெண்ட்ட ரெட்டி தனது கல்வி, வேலை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். பல்வேறு பாடப் பிரிவுகளைக் குறித்து பேசிய அவர், மாணவர்களின் உயர்கல்வி, எதிர்கால வேலை வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடினார். மேலும் மாணவர்கள் மனநிறைவுடன் வாழ மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், மகிழ்ச்சியுடன் கல்வி கற்பது குறித்தும் தெரிவித்தார். தொடர்ந்து, உயர்கல்வி குறித்து கலந்துரையாடிய அவர், பொறியியல் படிப்பில் உள்ள பல்வேறு பாடப்பிரிவுகள், யுபிஎஸ்சி, ஜெஇஇ, விஐடி பொறியியல் நுழைவுத் தேர்வு குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினார். அத்துடன், மாணவர்கள் வாழ்க்கையில் உயர தங்களின் விருப்பம், ஆர்வத்தின் அடிப்படையிலே பாடப்பிரிவை தேர்வு செய்து படிக்க வேண்டும்,” என்றார்.
வங்கி மோசடி: ஒருவருக்கு சிறை
தஞ்சாவூர் செப்.2- தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள தளிக் கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ்(69). இவர் பட்டுக்கோட்டை அருகே உள்ள வேப்பங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணியாற்றி வந்தார். இவர், கடந்த 2006-ஆம் ஆண்டு பணியில் இருந்த போது வங்கி பணத்தில் 24 லட்சத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி வங்கி நிர்வாகம் தரப்பில், தஞ்சை வணிக குற்ற புலனாய்வு பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு பட்டுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் துரைராஜ் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்தார். இந்நிலையில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முருகன் அளித்த தீர்ப்பில் துரைராஜூக்கு 9 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.50,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இஸ்லாமியர் துவக்கி வைத்த விநாயகர் சிலை ஊர்வலம்
கடலூர், செப். 2- மத ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக கடலூர் மாவட்டம் குமராட்சியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை இஸ்லாமியர் துவக்கி வைத்தனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ் மைந்தர்கள் இயக்கத்தினர் சார்பில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகிலுள்ள குமராட்சியில் சுமார் 10 அடி உயர விநாயகர் சிலை நிறுவப்பட்டு பூசை நடைபெற்றது. அங்குள்ள பொய்யுரையாப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தை இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த இமாம்அலி கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஊரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றது. இந்நிகழ்ச்சியில், வர்த்தக சங்க கௌரவத் தலைவர் சக்கரவர்த்தி, தலைவர் கே.ஆர்.ஜி.தமிழ், ஆசிரியர் வரதராஜன், ஊர் நாட்டாமை கலியபெருமாள், ராமச்சந்திரன், கூட்டுறவு சங்கத் தலைவர் செல்வம், இயக்குனர் இளஞ்செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டும் வகையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தை அனைத்துத்தரப்பினரும் வரவேற்றனர்.
வேளாண் கருவிக்கு விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம்.செப்.2- விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் (2019 -20) ஆம் நிதி யாண்டில் ரூ.16 கோடியில் வழங்கப்படவுள்ள வேளாண் இயந்திரங்களைப் பெற விவசாயி கள் விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரி வித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவல கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு:- விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் 8 குதிரைத் திறன் முதல் 70 குதிரைத் திறன் சக்தி கொண்ட டிராக்டர்கள், பவர் டில்லர், நெல் நடவு இயந்தி ரம், வைக்கோல் கட்டும் கருவி, கதிர் அறுக்கும் இயந்திரம், சுழல் கலப்பை, விசைக் களை யெடுப்பான், விதை விதைக்கும் கருவி, வரப்பு அமைக்கும் கருவி, நிலம் சமன் செய்யும் கருவி, தட்டைவெட்டும் கருவி உள்ளிட்ட வற்றை விவசாயிகள் மானிய உதவியுடன் வாங்கிப் பயன்பெறலாம். இதற்கு மத்திய அரசின் வேளாண் இயந்திரமயமாக்கும் துணை இயக்க வழி காட்டி நெறிமுறைகளின்படி, அரசு மானியம் வழங்கப்படும். சிறு, குறு, ஆதிதிராவிட, பழங் குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 விழுக்காடு வரையும், இதர விவசாயி களுக்கு 40 விழுக்காடு வரையும் மானியம் வழங்கப்படும். வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத் தின்கீழ், தனிப்பட்ட வேளாண் இயந்திரங் களை விவசாயிகள் மானியத்தில் பெற்றிட ஏதுவாக, 216 டிராக்டர்கள், 152 பவர் டில்லர் கள், 17 நாற்று நடும் கருவிகள் மற்றும் 181 இதர வேளாண் இயந்திரங்கள் வாங்கிக் கொள்ள நடப்பாண்டில் ரூ.1,095 லட்சமும், 57 வாகன வாடகை மையங்கள் அமைக்க ரூ.506 லட்சமும் விழுப்புரம் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வட்டார அளவிலான வேளாண் இயந்தி ரங்கள் வாடகைக்கு வழங்கும் மையங்கள், அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங் களை விவசாயிகள் குறைந்த வாடகையில் பெற்றிட ஏதுவாக, 25 வேளாண் இயந்தி ரங்களை வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைக்க நிகழாண்டுக்கு ரூ.250 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, விவ சாயிகள், விவசாயக் குழுக்கள் அல்லது தொழில் முனைவோர் பயனாளிகள் ஆவர். ரூ.25 லட்சத்திலான வாடகை மையங்கள் அமைக்க, 40 விழுக்காடு மானிய அடிப்படை யில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். கிராம அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கும் 32 மையங்கள் அமைக்க ரூ.256 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பண்ணை சக்தி குறைவாக உள்ள கிரா மங்களில் குறைந்தபட்சம் 8 உறுப்பினர் களைக் கொண்ட விவசாயக் குழுக்கள் மொத்தம் ரூ.10 லட்சத்துக்கு குறையாத மதிப்புடைய பண்ணை இயந்திரங்களை வாங்கி, வாடகை மையங்களை நடத்தலாம். இதற்கு 80 விழுக்காடு மானியம் வழங்கப்ப டும். மானாவாரி இயக்க திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் உள்ள குழுக்களும் இதைப் பயன்படுத்திக் கொள்ள லாம். இதற்கு, விவசாயிகள் உடனடியாக உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.